Tuesday 10 July 2012

உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை. . .

 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 இனிக்க இனிக்க நீ பேசவில்லை
 என்றாலும் என் நெஞ்சம் மறக்கவில்லை


 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 செல்வ பரம்பரையில் பிறந்தாலும் - அதன்
 சிங்காரப் பிடியில் வளர்ந்ததில்லை
 உள்ளாச உலகத்தில் இருந்தாலும் - நான்
 உழைப்பவர் துயரத்தை மறந்ததில்லை

 மறந்ததில்லை. . .

 உனக்கும் எனக்கும் வெகு தூரமில்லை
 நான் நினைக்காத நேரமில்லை - உன்னை
 நினைக்காத நேரமில்லை


 இரவுக்கு நிலவால் அழகு வரும் -  என்
 இதயம் உன் நினைவால் அமைதி பெறும்
 உயிருக்கு உடலால் பெறுமை வரும் - நம்
 உறவும் ஒரு நாள் புதுமை பெறும்


இடைவேளை இசையாக ஒரு நல்ல பாடலை இங்கே தந்துள்ளேன்...

எதையும் தாங்கும் இதயம் என்னும் படத்தில், சூலமங்கலம் ராஜலட்சுமியின் தேன் குரலில் இடம்பெற்ற பாடல்.  இசை - டி.ஆர். பாப்பா.
இதைப்போல இசை மேதைகளால் அமைக்கப்பட்ட பாடல்கள் ஏராளம் ...

புத்ராஜெயா மலர்க்கண்காட்சியில் எடுத்த புகைப்படங்களை பதிவிடும் நேரம் அவற்றை  ரசித்தவண்ணம் இது போன்ற மென்மையான இசையையும் மனதில் முனுமுனுப்பது எனக்குப் பிடித்த ஒன்று.

No comments:

Post a Comment