Friday 20 July 2012

இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான். .

"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் - அதை 
இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்
பறந்து பறந்து பணம் தேடி
பாவ குளத்தில் நீராடி
இறந்தவனைச் சுமந்தவனும் இறந்துட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்"


அமரர் ஊர்தியில், சவப்பெட்டியில் கிடத்தப்படும்வரை பலர் இந்த உண்மையை உணருவதே இல்லை. 

பேரும் புகழும் வந்து வளமாக வாழ்வோர்கூட, ஒரு நாள் வரும் அழைப்புக்கு மதிப்புக்கொடுத்து போயே ஆகவேண்டிய சூழ்நிலை. 

எமன் எதிரே வந்தழைக்கும் போது போய் வருகிறேன் என யாரிடமாவது சொல்ல முடியுமா நம்மால்?   அல்லது "சற்று பொறு என்னுடைய குடும்பதினரிடம் சொல்லிவருகிறேன்" என எமனிடம் தான் பெர்மிஷன் வாங்க முடியுமா?

இருந்தும், இடைபட்ட காலத்தில் எப்படியெல்லாம் இறுமாப்புடன் தாந்தோன்றித்தனமாக செயல் படுகிறார்கள் சிலர்... பிறர் சொல்வதுபோல நல்ல மனதுள்ளவர்கள் வாழ்வது சிறமமானதுதானோ....?

கண் முன்னே தீயவர்களின் அநியாயங்களுக்கு துணை போகும் சிலரின் ஏகோபித்த வாழ்வினைப் பார்ப்பதனால் பாவங்கள் பற்றிய பயம் அற்றுப் போய்விடுகிறதோ...?

எப்படிப்பார்க்கினும் உண்மை ஒன்றே... நாம் விடும் மூச்சுக்காற்றிலிருந்துதான் எவ்வளவு நாள் நாம் உயிர்வாழ்வோம் என்கிறது நம் மதம். அது நிற்கும்போது நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது தெரிந்து விடும்....

1 comment:

  1. ஒப்பற்ற உயரிய கருத்து.

    "பறந்து பறந்து பணம் தேடி
    பாவ குளத்தில் நீராடி
    பிறந்து வந்த நாள் முதலாய்
    பேராசையுடன் உறவாடி"

    ReplyDelete