Friday 27 July 2012

"இதயத்தில் இடம்பெற்றவை..."

மார்கழி மாத வைகறை.  பனித்துளி விழுந்து மலர்கள் மென்மையான கணத்தோடு தலை வணங்கி அங்கும் இங்கும் சாய்கின்ற காட்சி. விடிந்தும் விடியாதது போன்ற இளம் காலை.  வண்டினம் துயில் நீங்கி மலர்களிடம் வருவதற்குள், பெண்கள் முந்திக்கொண்டு அவற்றைப் பறித்து இறைவனுக்கு மாலையாக்கத்  தொடங்கி விடுகின்றனர்.

அவர்களுள் ஒருத்தி மலர்களைப் போன்றே மனதில் தோன்றும் வண்ண நினைவுகளில் மூழ்கி தன்னையும் மறந்து பாடுகிறாள்....

"மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே"

1965ல் வெளிவந்த இதயக் கமலம் திரையில் கே வி மகாதேவன் அவர்களின் இசையில் கண்ணதாசனின்  எழுத்தாற்றலில் இந்தப் பாடல். குரல்: P சுசீலா.

--0--0--0--0--0--0--

மரிக்கொழுந்துச் செடியை பார்த்திருப்போம்.  நுனித் தளிரிலிருந்து அடி வேர் வரை, எங்கு கிள்ளி முகரும் போதும்  வீசுகின்ற மணம் போல், இந்த பாடலில் எந்த வரியில் எந்த வார்த்தையில் பார்த்தாலும் அதில் ஒரு இனிமை தெரிகிறது.  பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இருவரின் காதல் உரையாடல் இப்பாடல்....

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...

மலரும் கொடியும் நடப்பதில்லை...
அவை மணம் தர என்றும் மறப்பதில்லை...

மலரும் கொடியும் பெண்ணென்பார்...
மதியும் நதியும் பெண்ணென்பார்...


--0--0--0--0--0--0--

எந்தப் பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் சோதனை என்று வந்திடும் போது எல்லோரும் துவண்டு விடுகிறார்கள். தனிமைப்படுத்தப்படும் அது போன்ற நேரங்களில் தங்களுடன் இருப்பது கடந்து போன காலங்களின் அனுபவங்களே. அருகே இருந்தும் மனம் விட்டுப் பேச முடியா சூழ்நிலையில் இருவர் படும் துயரத்தை கவிஞர் கண்ணதாசன் சிவாஜி பிலிம்ஸ் ஒன்றுக்காக பாடலாக எழுதியிருந்தார். சோகத்தில் சுகமுண்டு என்போரின் சாட்சி இப்பாடல்.

"தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு

(தூங்காத கண்ணென்று ஒன்று...)

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று

(தூங்காத கண்ணென்று ஒன்று...)"

--0--0--0--0--0--0--

தொடர் வரிகளில் தேனைப்போல் இனிமையை தரத்தெரிந்திருந்தவர் கண்ணதாசன் அவர்கள். சினிமாப் பாடலாய் இருந்தாலும் அதில் மொத்தப் படத்தின் சிக்கலான  கதைக்கருவை சிரமமில்லாமல் சொல்லிச் சென்றவர் அவர். 

இருவர் உள்ளம் திரையில் பின்வரும் பாடலில் அவரின் திறமை தெளிவாகத்தெரிந்தது.

"மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே

அடிமை செய்தானே

உருகிவிட்ட மெழுகினிலே ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது
பழுது பட்ட கோவிலிலே தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா


இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா

பாட்டு பாடுமா
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா"

1 comment: