Friday 27 July 2012

தனியார் 'டியூஷன்' மையங்கள். . .


குமார் கார்த்திகேயன் என்னுடைய நெடுநாளைய நண்பர். அவரும் அவருடைய மனைவி மோனாவும் அன்மையில் அவர்களின் புதுவரவோடு எங்களின் வீட்டிற்கு விஜயம் செய்தனர். அப்போது எடுத்த படம் இது.

மூன்று தனியார் டியூஷன் மையங்களை நிர்வகிக்கும் இவர்கள், தங்களிடம் வரும் மாணவர்களுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பாடத் திட்டத்தின் வழி  நவீன முறையில் அதிக 'ஏ' எடுக்க கற்றுத்தருவதாக  கூறினர்.   இதனால் தேர்ச்சியின் விகிதம் உயர்வதாகவும், அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ச்சியடைவதாகவும், அவர்களின் மூலம் தங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைப்பதாகவும்  தெரிவித்தனர்.

பரவலாக சொல்லப் படுவதை போல், பள்ளிகளைவிட தனியார் டியூஷன் மையங்களில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறதா..?  பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள்கூட  இதுபோன்ற டியூஷன் மையங்களுக்கு போகும் ரகசியம் இதுதானா ?  அல்லது காதில் விழும் கிசு கிசு போல் வரவிருக்கும் தேர்வுத்தாள்கள் பற்றிய கணிப்புக்களையோ, தலைப்புக்களையோப் பெற  இத்தகைய மையங்களில் கூட்டம் கூடுகிறதா...?

இதில் உள்ள உண்மை நிலவரம் நமக்கு சரிவரத் தெரியாது. ஆயினும் நமக்கு நன்கு தெரிந்த ஒன்று, மேலே படத்தில் இருக்கும் இருவரும் தங்களின் கடின உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் உயர்ந்தவர்கள்.

இவர்களின் சேவை மனப்பான்மை இவர்களோடு பழகும் பலருக்கும் தெரிந்தது. பத்து நிமிடம் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தால் அதில் மாணவர்களுக்கு உபயோகமான பலவற்றை இவர்கள் பேச்சியிலிருந்து தெரிந்து கொள்ளலாம். வெறும் வாய்வார்த்தைகளில் மட்டுமல்ல, இவர்களின் செயலிலும் நேர்மை இருக்கும். இதுவே ஒன்றிலிருந்து மூன்று டியூஷன் மையங்களை இவர்கள் பெற்றிருப்பதன் ரகசியமுமாகும்.

 ஒரு குடும்பத்தின் எதிர்காலம் உயர்கல்வி கற்றவர்கள் மூலமே மேன்மை அடைகிறது என்பதனை பலரும் உணர்ந்திருக்கின்றனர் தற்போது.

இங்கு வசூலிக்கப்படும் கட்டனம் அதிகமாயிருந்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அதிக அளவில் பிள்ளைகள் டியூஷன் மையங்களுக்குப் போவது இதையே காட்டுகிறது.

No comments:

Post a Comment