Friday 1 November 2013

சதுரங்கம், நமது பூர்வீகம்...

மறைந்து வரும் நமது பழங்கால பாரம்பரிய  விளையாட்டுக்களில் நொன்டி ஆடுவது, பல்லாங்குழி போன்றவை தற்போது  மற்றவர்களால் தூசி தட்டி புதுப்பிக்கப்படுகின்றன.  அவை தங்களது என அவர்கள் உரிமை கொண்டாடும் நாள் வர வெகு தூரமில்லை.  இதுப்போன்ற விளையாட்டுக்களில் தப்பித்தது கபடி மட்டுமே... மற்ற விளையாட்டுக்களைப்போன்ற பரிதாப  நிலைதான் சதுரங்கத்துக்கும் ஆகும், நாம் விழிப்படைந்து அதன் உரிமையினை தற்காத்துக்கொள்ளாவிடில்.

அதெப்படி...?

கால்பந்து, பூப்பந்து, திடல் தடப் போட்டிகள் போன்றே, சதுரங்கத்துக்கும் முக்கியத் துவம் கொடுப்போம்.  குறைந்தது நம் வீட்டிலாவது அதனை விளையாடுவதை வழக்கத்தில் கொள்வோம்.

 நாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சிந்தனைச் சிற்பியாக்கும் காரணிகள் சதுரங்கத்தில் உண்டு.

அடுத்த தலைமுறையினருக்கு சதுரங்கம் நமது பூர்வீகம் என்பதனை விட்டுச்செல்வோம்.

No comments:

Post a Comment