Thursday 21 November 2013

ஒன்பதாவது சுற்றில் ஆனந்த் தோல்வி

உலக செஸ் சாம்பியன்ஷிப் : 3வது முறையாக ஆனந்த்தை வென்றார் கார்ல்சன்



விஸ்வ நாதான் ஆனந்தின் ஆட்டங்களை பல வருடங்களாக தொடர்ந்து பார்த்தும் ரசித்தும் வந்திருக்கிறேன். ஆனால், இன்று அவர் விளையாடிய 9வது சுற்று ஆட்டம் அவர் செய்த தவறுக்காக தண்டிக்கப்பட்டார் என்றே எண்ண வேண்டி இருக்கிறது.

மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின், முதல் நான்கு சுற்று போட்டிகள் "டிரா' ஆனது. 5, 6வது சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றார். 7, 8 வது சுற்றுக்கள் "டிரா' ஆனதால், ஆனந்த் 3, கார்ல்சன் 5 புள்ளிகள் பெற்றிருந்தனர். 
இன்று ஒன்பதாவது சுற்று நடந்தது. ஆனந்த் வெள்ளை காய்களுடன் விளையாடினார். 27வது நகர்த்தலில் ஆனந்த் பெரிய தவறு செய்தார். இதைப் பயன்படுத்திய கார்ல்சன், சிப்பாயை இரண்டாவது ராணியாக மாற்றினார்.  வேறுவழியில்லாத நிலையில், 28வது நகர்த்தலில் ஆனந்த் தோல்வியை ஏற்றுக்கொண்டு விலகினார்.
இன்றைய தோல்வியினால் அவர் கார்ல்சனிடம் மூன்று முறை தோல்வி கண்டு தனது சாம்பியன்ஷிப் பட்டத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கார்ல்சன் இன்னும் ஒரே ஒரு சமன் நிலை ஆட்டம் பெற்றாலே போதும், 2013ன் சாம்பியனாக முடிசூட்டிக்கொள்ள.









































No comments:

Post a Comment