Thursday 7 November 2013

தொடங்கியது 2013ம் ஆண்டின் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி...

தொடக்க விழாவின் போது உரையாற்றும் தமிழ் நாட்டின்  முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைக்க 2013ம் ஆண்டின் அனைத்துலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னையில் விழாக் கோலம் பூண்டது.

6ம் நூற்றாண்டு போர்க்கால விளையாட்டாக இந்தியாவின் பூர்வீகமான சதுரங்கம், இன்று உலகலாவிய நிலையில் உயர்ந்ததொரு இலக்கினை எட்டியிருப்பது கண்டு தாம் பெருமைப் படுவதாக முதலமைச்சர் தனது உரையில் சரளமான ஆங்கிலத்தில் குறிப்பிட்டார்.

விஸ்வநாத் ஆனந்த் விளையாட கருப்பு காயையும், கார்ல்சென் விளையாட வெள்ளை காயையும் முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்து கொடுத்தார்.

தமிழ் நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு ஃபிடே சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

செஸ் விளையாட்டுக்கு செல்வி ஜெயலலிதாவின்  மகத்தான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு  ஃபீடே சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினர் தகுதியை   உலக செஸ் சம்மேளன தலைவர் கிர்ஷன் இலியும்சிநொவ்  வழங்கி சிறப்பித்தார்.


போட்டி நாட்களையும் ஓய்வு நாட்களையும் குறிப்பிடும் செஸ் காலண்டர்

முதல் போட்டி வரும் சனிக்கிழமை நமது மலேசிய நேரப்படி மாலை 5.30க்கு தொடங்கும்.

மொத்தம் 12 சுற்றுகள்.

முதலி 6.5 புள்ளிகளைப் பெருபவர் வெற்றியாளாராக அறிவிக்கப் படுவார்.

அப்படி ஆரம்ப நிலையிலேயே தேவையான 6.5 புள்ளிகளை வெற்றி பெற்றிடும் போது மீதம் உள்ள விளையாட்டுக்கள் நடைபெறாது.

12 சுற்றுக்கள் முடிந்தும் சமன் நிலை கண்டால், 28ம் தேதி அதிவிரைவு சுற்று நடைபெற்று வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.

மேலே இருக்கும் காலண்டரில் ஓய்வு நாட்களும் இடம்பெற்றுள்ளன. ஆர்வளர்கள்  அதற்கேற்றாற்போல் இவ்வாண்டின் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரசித்து மகிழலாம்.

அடுத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இதோ...

 போட்டியாளர்கள் இருவரும் கைகுலுக்கிக் கொள்கின்றனர்.

  விஸ்வ நாதன் ஆனந்த் தனது பயிற்றுனர்களின் பெயர்களை அறிவிக்கும்போது, தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் கார்ல்சன்.

ஆனந்தின் உரையின் போது விஷமத்தனமாக புன்னகைக்கும் கார்ல்சன்.

No comments:

Post a Comment