Sunday 13 January 2013

பொங்கல் கொண்டாடுவோம் வாங்க...










அட என்ன இது, சம்பந்தமே இல்லாம பொங்கல் திரு நாளுக்கு இப்படி சில படங்கள் அப்படின்னு நீங்க நினைக்கக்கூடும். நீங்க நினைக்கிறதுலே தப்பில்ல.  ஏன்னா, இப்ப ரொம்ப பேரு இப்படித்தான் சம்பந்தமில்லா விசயங்கள பேசிக்கிட்டு வராங்க.

" உங்ககிட்ட ஆடு இருக்கா, மாடு இருக்கா, விலைச்சல் நிலமிருக்கா, சொந்த வீடிருக்கா, ? இதெல்லாம் இல்லைன்னா அப்புறம் எதுக்கு பொங்கல் கொண்டாடுறீங்க?"ன்னு கேட்கறாங்க.

பொங்கல் பெருநாள் என்பது தமிழர்களின் பாரம்பரிய திருநாள். இயற்கைக்கும், இயற்கையையொட்டி உழுது பயிரிட்டு நாம் உண்ணும் உணவுக்கு காரணமான எங்கோ இருக்கும் விவசாயிகளுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வளர்ப்பு மிறுகங்களுக்கும் மானசீகமாக நன்றி சொல்லும் ஒரு சிறந்த நாள்.

 மாடு, மனை இருந்தால்தான் பொங்கல் கொண்டாட வேண்டுமென்பது பிதற்றலாகும்.

No comments:

Post a Comment