Thursday 31 January 2013

மீண்டும் மீண்டும். . .

ஆண்மீகத்தில் தீவிரம் காட்டுவோர் ஒன்றைச் சொல்வார்கள்.

" மீண்டும் மீண்டும் இறக்கிறோம்,
  மீண்டும் மீண்டும் பிறக்கிறோம்...."

அதாவது,

பிறக்கிறோம், இறக்கிறோம்....
மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் இறக்கிறோம்...
மீண்டும் மீண்டும் பிறக்கிறோம், மீண்டும் மீண்டும் இறக்கிறோம்...

இப்படி நமக்கு விளங்கா விதத்தில் மகாமாயையினால் நமக்கு தெரியா வண்ணம் நம்முடைய முன்பிறவியும், அடுத்த பிறவியும் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதனில் இருந்து விடுவதென்பதும் முடியாது, அதனை மீறி செயல்படுவதென்பதும் முடியாது.

உதாரணதிற்கு, கண்பார்வை இல்லாத ஒருவரிடம் ஒளியினை எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை ருசிக்க முடியுமா, நுகர முடியுமா அல்லது தொடத்தான் முடியுமா? பார்க்க மட்டுமே முடிகின்ற அதை நிரூபிக்க எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது. நம்முள் ஆன்மா இருப்பதை நிருபிப்பதென்பதும் அப்படியே.

இதைப்போலவே நமது சாஸ்திரங்கள் சொல்லுகின்ற பலவற்றை நம்மால் நிரூபிக்க இயலாது. அதற்காக அவை இல்லையெனும் பொருளில் கொள்வது முறையும் அல்ல.

சில நேரங்களில் எவற்றையெல்லாம் நிரூபிக்க முடியாமல் போகிறதோ அவற்றை நம்புவதைத் தவிர வேறெந்த வழியும் நமக்கு கிட்டுவதில்லை, அதில் ஒரு வேலை உண்மை இருக்குமோ எனும் எண்ணத்தில்.

அதனை தெரிந்து கொள்வதில் நேரத்தை செலவிடுவதை விடுத்து, இப்போதே, இந்த உலகத்தையே ஆனந்தமானதாய் எண்ணி இருக்கப் பழகிக் கொள்வதே சிறப்பு.

" நான்" எனும் ஆனவம் அழியும் நேரம், "தான்" எனும் ஆன்மா நம்மில் பூரணத்துவம் பெறும் என்கிறார்கள் சான்றோர்.

No comments:

Post a Comment