Tuesday 15 January 2013

சிரிப்பு . . .

 பொங்கிவரும் சிரிப்பை வாயில் பல் தெரிய உண்மையாக மனம் விட்டு சிரிப்பதென்பது பல நோய்களை தீர்க்கும் அரிய மருந்தென்கின்றனர்.
சிலர் இயற்கையான தங்களின் சுபாவம் மூலம் இப்படி கள்ளமில்லா சிரிப்புக்கு சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். பலர் இந்த வித்தையை சில பயிற்சிகள் மூலம் அடைகின்றனர். அலட்டிக்கொள்ளாமல், அன்போடு பழகும் அனைவருக்கும் இது சாத்தியமே.

சிரிப்பு உடலின் சுரப்பிகளை புத்துணர்வுடன் செயல்படச் செய்கிறது. தேவையான ஹோர்மோன்களும், என்ஸைம்களும் உடல் உறுப்புக்களை சீராக  தத்தம் பணிகளைச் செய்ய  உதவுகின்றன. இதனால் அரோக்கியமாக வாழ்கிறோம். நோயுற்றவர்களுக்கு அவர்களை பீடித்திருக்கும் நோயின் தாக்கம் குறைகிறது...மரணம் தள்ளிப்போகிறது. இது மருத்துவ உலகில் கண்டறியப்பட்ட உண்மை.

எனவே, மனதில் எவ்வித கள்ளமும் இல்லாமல் சிரிப்பவர்களோடு சேர்ந்து சிரிப்போம், வாழ்வை சிறப்பாக வாழ்வோம்!!!

சிரிப்புக்கு சில படங்கள்...

டாக்டர் அருளுடனான ஒரு நேர்காணலின்  போது...



( இன்னும் வரும்.... )



No comments:

Post a Comment