Friday 11 January 2013

சீர்காழி கோவிந்தராஜன். . .

சீர்காழி கோவிந்தராஜன் கணீர் குரலுக்குச் சொந்தக்கார பழைய பின்னனி பாடகர். அவர் பாடியவற்றுள் பல இன்னும் பழமை விரும்பிகளின் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும். அவர் பாடிய பாடல்களில் எனக்கு பிடித்தவை இவை....

அமுதும் தேனும் எதற்கு நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு
 - தைபிறந்தால் வழி பிறக்கும்

மாம்பழத் தோட்டம்,
மல்லிகைக் கூட்டம்,
மணக்க வரும் மாலைப் பொழுதோடு
மருவியணைக்கும் மயக்கம் பிறக்கும்
மலர்ந்து வரும் ஆசை விழியோடு
மன்மதன் வந்தான் தேரோடு....இங்கே ..
காதலர் கண்ணும் நெஞ்சும் படக் படக் பட் பட்
- ஒளிவிளக்கு

வட்ட வட்டப் பாறையிலே
வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி
ஆலவட்டம் போடுதடி
- பழனி

அன்பே என் ஆரமுதே வாராய்
 - கோமதியின் காதலன்

காதல் உண்டாகும் கட்டழகி உன்னாலே
நெஞ்சு ஒண்ணாகும் பக்கத்திலே நின்னாலே
அடே கண்ணு சின்ன பொண்ணு
என்னை கொஞ்சாதே கோழிமுட்டை கண்ணாலே
- இரு வல்லவர்கள்

வாம்மா வாம்மா சின்னம்மா
வயசு வந்த பொன்னம்மா
இந்த நேரம் காட்டுக்குள்ளே
எங்கே வந்த செல்லம்மா
- தாயில்லா பிள்ளை

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
- கொடுத்து வைத்தவள்

எல்லையில்லாத இன்பத்திலே நாம்
இணைந்தோம் இந்நாளே
இமையும் விழியும் போலே
இணைந்தோம் அன்பினாலே
- சக்கரவர்த்தித் திருமகள்

கரும்பாக இனிக்கின்ற பருவம்  -இதை
கதையாக சொல்லுது உன் காதல் உருவம்
 - கொங்கு நாட்டு தங்கம்

ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே
ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்கார சிலையே நீ திரும்பி பார்த்தால் போதும்
எல்லாம் வசமாகுமே
- சபாஷ் மீனா

காதலென்னும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
- சக்கரவர்த்தித் திருமகள்

தட்டு தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
- சாரதா

சிங்கார தேருக்கு சேலை கட்டி
சின்ன சின்ன இடையினில் பூவக்கட்டி
தெரு தெருவா அத நடக்கவிட்டா
இந்த சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும்
ஆஹா சின்னஞ்சிறு மனசுகள் என்னாகும்
- இது சத்தியம்

சீவி முடிச்சிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா மச்சான்
தேரோட்டம் பாக்கப் போறேன் வாரியா
- பிள்ளைக்கனி அமுது

பொங்கும் அழகு பூத்து குலுங்கும்
தங்கதாமரையே
அன்பு வெள்ளம் அள்ளி வழங்கும்
இன்பக் காவிரியே
- தங்கம் மனசு தங்கம்

வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ
அன்புக் கணவனின் முன்னாலே மனைவி
அழகாகச் சிந்தும் புன்சிரிப்பூ
- எங்கள் குல தேவி

வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
- ராஜாதேசிங்கு

யாருக்கு யார் சொந்தம் என்பது
என்னை நேருக்கு நேர் கேட்டால்
நான் என்ன சொல்வது
- சபாஷ் மாப்பிள்ளை

செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே
செண்பக பூச்சரமே
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
- யானைப்பாகன்

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் உனைதேடுதே
- ராஜராஜன்

இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
உமது இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கியிசை பாடுதே
- ராஜராஜன்



சீர்காழி கோவிந்தராஜனின் சோக கீதங்களையும் அறிவுரைப் பாடல்களையும் வேறொரு பதிவில் பார்ப்போம்...

No comments:

Post a Comment