Sunday 15 April 2012

எதிர்வீட்டு நண்பர் பழனி . . .

எதிர்வீட்டு நண்பர் பழனியின் குடும்பத்தினர் படங்களை இன்றைய பதிவில் இடம்பெறச்செய்திருக்கிறேன்.

சினேகன் எனபது அவரின் 8 மாதக் குழந்தையின் பெயர். ஒவ்வொரு முறையும் இவர் அழுகின்ற போது நல்ல நல்ல தாலாட்டுப் பாடல்கள் அவர்கள் வீட்டிலிருந்து காற்றோடு காற்றாக எங்களுக்கும் கேட்கும். சீடிக்களில் அவ்வகை தாலாட்டுகள் இருந்தாலும், அவர்கள் வீட்டில் யாராவது ஒருவர் அழும் குழந்தையை சாந்தப் படுத்த பாடுவார்கள்.

"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே..
காலம் இதைத்  தவற விட்டால்
தூக்கமில்லை மகளே தூக்கமில்லை மகளே"

"கண்ணே ராஜா கவலை வேண்டாம்
அப்பா வருவார் தூங்கு...."

"அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா..."

போன்ற அருமையான தாலாட்டுப் பாடல்கள் அவர்களின் சீடியில் இருக்கும் என்று நினைக்கிறேன். அடிக்கடி இதுபோன்ற பாடல்கள் அவர்களின் ஒலிபரப்பில் இடம்பெறும்.

மூவினங்களும் குடியிருக்கும் தாமான் போன்ற இடங்களில் அண்டை அயலாரிடம்  நல்லிணக்கத்தோடு பழகிவருவதே சிறப்பு. அதிலும் நம்மவர்கள் அருகில் வசித்தால், இன்னும் சற்று கவனம் செலுத்தி அவர்களோடு நட்புறவுடன் வாழ்வதே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும்.

அப்படியொரு நல்ல குடும்பத்தினரின் புகைப்படங்களை இங்கே என் பதிவில் போடுவதில் எனக்கும் மகிழ்ச்சியே....













No comments:

Post a Comment