Monday 9 April 2012

நண்பர் பாலா...

அவ்வப்போது அறிமுகமாகும் சிலரில் நல்ல நண்பர்களாகுவோரும் ஓரிருவர் இருப்பர்.

சில வருடங்களுக்கு முன் அப்படி ஒருவர் நண்பரானார். அரசாங்கத் தொழில்..அதிலும் ஆசிரியராக பதவி வகித்து வருகிறார்.

வசதியானவர். பல கோணங்களில் இருந்து அவருக்கு பொருள் வளம் பெருகுவதால், அவர் சொல்லும் வெற்றியின் ரகசியங்களை அவர் அறுகில் இருப்போர் ஆர்வத்தோடு கேட்கிறார்கள்.

"ஒரு கால கட்டத்திற்கு அப்புறம் பணம் நமக்காக வேலை செய்ய வேண்டும். எந்நேரமும் நாமே அதற்காக வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது" என்பார்.

வஞ்சகமின்றி உபரி வருமானம் ஈட்டும் வழிகளை கோடிட்டு காட்டுவார். இயற்கையோடு ஒன்றிப்போகும் நேர் வழிகள் அவை. மற்றவர்களை ஏமாற்றாமல், சட்டத்திற்கு எதிராக இல்லாமல், எல்லோரும் ஏற்றுக்கொண்ட விதிகளுக்கு உட்பட்டு சம்பாதிக்கும் குறிப்புகளை சொல்வார்.

தன்னம்பிக்கை, முற்போக்கு சிந்தனை, இளையோரின் நன்னெறி கொள்கைகளைப் பற்றி அவர் பேச ஆரம்பித்து விட்டால், அடுத்தடுத்து வந்துகொண்டே இருக்கும் புதிய புதிய சீரிய கருத்துக்கள்.

குடத்திலிட்ட விளக்கினைப் போல இல்லாமல் பலரும் நலமடைய வலைதளத்திற்கு  வருமாறு அழைத்துக்கொண்டிருக்கிறேன். அவருக்கு நேரமும் ஆர்வமும் அதிகமிருந்தாலும் ஏனோ இன்னும் அந்த சின்ன வட்டத்திலிருந்து வெளிவர அதிகம் யோசிக்கிறார்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம் அல்லவா...?

No comments:

Post a Comment