Tuesday 4 June 2013

மனக்கடல் பொல்லாதது...

தினமும் நாளிதழ் படிப்பது ஒரு விசயத்தை தெளிவு படுத்துகிறது.

மனித மனம் பொல்லாதது.அது எப்போதுமே சுய நலமாகத்தான் மக்களை ஆட்டிப்படைக்கின்றது.

ஜீவகாருண்யம், தர்மம், ஞாயம் போன்றவை இரண்டாம் பட்சமே.  தனக்கென வரும் போது தன்னிஷ்ட்டப்படிதான் எல்லாமும் இருக்கவேண்டும். அதற்காக ஒன்றை அழிக்கவும் தயார்.

தேர்தலின்போது அரசியல் தலைவர்கள் பணத்தை வாரி வழங்குகிறார்கள். ஜெயித்த பின் இழந்ததைவிட பல மடங்கு சம்பாதித்து விடலாம் எனும் நினைப்பில்.

கொள்ளையர்களோ கொள்ளையடிக்கிறார்கள். தம்முடைய பங்கையும் பணக்காரர்கள் பதுக்கிவிட்டார்களென சொல்கிறார்கள் அவர்கள்.

பழி பாவத்திற்கு அஞ்சாதோர் கொலையும் செய்கிறார்கள்.  தங்களுக்கு தொல்லை தருவோர் இனியும் இருக்கக்கூடாது இவ்வுலகில் எனச் சொல்லி.

இதுகூட பரவாயில்லை. இந்த தற்கொலை செய்து கொள்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் சொல்லும் காரணம் இன்னும் அசட்டுத் தனமாக இருக்கிறது.
" எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால் தற்கொலைதான் முடிவு.."

என்ன உலகம் இது....?
மனம் எப்படியெல்லாம் சிந்திக்கிறது....?

அதனால் தான் சொல்கிறோம்,
" மனக்கடல் பொல்லாதது".


No comments:

Post a Comment