Friday 24 May 2013

சின்ன சின்ன நடை நடந்து...

'சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுத கானம்
பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா...'

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் தாதியர் தினம் போன்ற  சிறப்பு தினங்களை ஏன் கொண்டாடுகிறோம்....?

அவர்களின் சேவைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அந்த தியாகத்தை போற்றி, அவரகளின் தொண்டுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே தான் நாம் அது போன்ற சிறப்பு நாட்களை நினைவுகூர்கிறோம். அவை அந்த ஒரு நாட்களுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் அவர்களின் அர்ப்பணிப்பு பூஜிக்கப் படவேண்டும்.

இந்த தூய எண்ணம் நம் மனதில் என்றென்றும் இருப்பது அவசியம்.

சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


'காவேரியின் கணவன்' படத்தில்  பி.சுசீலாவின் குரலில் இந்த பாடல் தாயுள்ளத்துக்கு ஒரு உதாரணம். பழைய பாடல் விரும்பிகளுக்கு இன்றும் இனிமை சேர்க்கும் அற்புதமான ஒன்று இது.

No comments:

Post a Comment