Wednesday 22 May 2013

காலம் மாறுது...

இனி உலக அறிவு இல்லாமல், சென்றடைய வேண்டிய இலக்கு இல்லாமல் நாம் வாழ்வது நாளுக்கு நாள் சிரமமாகிக் கொண்டு  வருகிறது. அறிவு ஜீவிகளாக இருக்காவிடினும், நமக்குத்  தேவையான தெளிந்த அறிவை அடைந்தே ஆகவேண்டிய அவசியம் வந்துவிட்டது.

இந்த நிலையில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ளாவிடில், மற்றவர்கள் சொல்லுவதையே நாம் எப்போதும் கேட்டு தலை ஆட்டவேண்டி இருக்கும். எல்லா விசயத்திலும் அவர்கள் நம்மை விட ஒருபடி முன்னே நிற்பார்கள்.

ஆக, மற்றவர்களுக்கு இணையாக நாம் வாழ  பொது அறிவும், நுண்ணறிவும் நமக்குத் தேவை.

'இன்டர்நெட்' என்னும் 'கம்யூட்டர்' உலகம் நமக்கு அந்த வாய்ப்பினை வழங்குகிறது.

உலகம் என்பது இப்போது கையடக்க ஐபேட்டிலும், ஐபோட்டிலும், கைபேசிகளிலும்  வந்துவிட்டது.  எதைப்பற்றி நாம் தெரிந்து கொள்ள நினைத்தாலும் அவை அனைத்தும் ஒரு சில வினாடிகளில் நம் கண் முன்னே காட்டிவிடும் இது போன்ற கையடக்க கருவிகள்.

சர்வதேச நிகழ்வுகளைக்கூட நம் வீட்டில் நடக்கும் சர்வ சாதாரண ஒன்று போல நம் பார்வைக்கு கிடைக்கின்றன சில நேரடி இணையதளங்கள் மூலமாக.

"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாறவேண்டும்
நம்மால் நாடும் மாறவேண்டும்"

No comments:

Post a Comment