Friday 26 October 2012

உலகமயமாக்கல் . . .

கலை, கலாச்சாரம், பொருளாதாரம், நவீன தொழில் நுட்பம் என செல்வாக்கு மிக்க அனைத்தையும் ஒன்று சேர்த்து அருகே அழைத்துவருவது உலகமயமாக்கல் எனும் செயல் முறையாகும். ஆங்கிலத்தில் 'குளோபலைஸேஷன்' என்னும் வார்த்தைக்கு இதுபோல் இன்னும் எவ்வளவோ பொருள்களைக் கூறலாம்.

உலகின் எந்தப் பகுதியில் யார் இருந்தாலும், அவர்களோடு அவர்களின் தேவைக்கேற்ப ஏற்படுத்திக்கொள்ளும் தொடர்பு ,  உலகச் சந்தையில் எல்லோரும் வெற்றியாளர்களே எனும் அதிசய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருகிறது தற்போது.

தனிப்பட்டவர்கள் மட்டுமன்றி, நாடுகளும் இந்த உலகமயமாக்கலில் இருந்து எட்டிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அரசாங்கங்களோடு தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் மிக இன்றியமையாததாக ஆகிவிட்டது. ஏழை நாடுகளுக்கும், முன்னேறி வரும் இதர நாடுகளுக்கும் இதனால் பெரும்  நன்மையே.

இதனால் அதிக வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன,  மக்களின் வாழ்வாதாரம் உயிர் பெற்று நாட்டின் வளர்சிக்கு ஆற்றல் மிகு சக்தியாக மாறுகின்றது.
ஜன நாயக பண்புகளை அதிகம் கொண்டுள்ள நாடாக உலகமயமாக்கல் வழி மக்கள் நண்மையடைகின்றனர். நாடுகளுக்கிடையே பூளோகப்பாடத்தில் படித்ததைத் தவிர வேறு எல்லைகள் கிடையாது.

தனி ஒருவரின் ஆதிக்கமோ, ஒன்றை விட்டால் வேறு வழியில்லை எனும் சூழ்நிலைகளோ கிடையாது. இருக்கும் அனைத்து சட்டங்களும் பொதுவில் என வரும்போது, அனுகூலங்களும் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

உலகமயமாக்கலில், கட்டாயம் என்று எதுவும் இல்லை, ஆங்கில மொழியைத் தவிர.   தொடர்பு மொழியாக ஆங்கிலம் இப்பொது எல்லா நாடுகளிலும் ஆட்சிபுரிகின்றது.  ஆங்கிலத்தை தவிர்த்து வந்த நாடுகளும் இப்போது 
அதன்  தேவையினையும், செல்வாக்கினையும் விளங்கிக் கொண்டு விட்டன.

நமது உள்உற்பத்திக்கு வெளி நாட்டுச்சந்தையினைத் தேடுவது இதனால் மிகச் சுலபமாகிவிட்டது. விதைகளில் இருந்து ஏற்றுமதி வரை விவசாயத்தில் நல்ல முன்னேற்றத்தை தருகின்றது.   தன்னியக்க ஆட்டோ இயந்திரங்களை தருவிப்பது இப்போது எளிதாகிவிட்டபடியால் பல விவசாயிகள் நன்மையடைந்து வருகின்றனர்.

போக்குவரத்துச் சேவைகள் பல மடங்கு தரத்தில் உயர்ந்துவிட்டன. கைபேசிகள், இன்டெர்னெட் இணைப்பு, செய்தி பரிமாற்றங்கள் போன்ற தொடர்புச்சாதனங்கள் நவீன மயமாக்கபட்டுவிட்டன.  மலிவு விலையில் அதிவேகமாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் இப்போது நமக்கு உண்டு. இதனால், திறந்த கல்வி பல்கலைக்கழகங்கள் பெருகி விட்டன. பட்டம் பெறும்  கல்விமான்கள் அதிகரித்து விட்டனர்.  நாட்டுக்கு நாடு கல்வி கற்போர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகிறது.

பங்குப்பரிவர்த்தனை ( ஷேர்மார்க்கெட் ), தொழில் முதலீடு ( இன்வெஸ்ட்மென்ட்  ) போன்றவற்றில் கால் வைக்கும் முன் அதனைப்பற்றிய எல்லா விபரங்களையும் திரட்டி, திட்டமிட்டு பணவிரையத்தை தவிர்த்து வெற்றி பெறும் வசதிகள் இப்போது நிறையவே உண்டு.  

பலவித  மருத்துவ ஆராய்ச்சிகளிலும் ஈடு பட உலகமயமாக்கல் வித்திடுகிறது. மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் நம்மை வந்தடைய முன்பு பல வருடங்கள் ஆகும்.  அந்த நிலை இப்போது இல்லை.  விற்பனைக்கு தயார் நிலையில் இருக்கும் புதிய மருந்துகள்  மேல் நாடுகளின் சந்தைக்கு வரும் அதே நேரத்தில் இங்கே நம்மையும் வந்தடைந்துவிடுகிறது.

சர்வதேச சந்தையினை அறிந்துகொண்டதன் மூலம் பல நிறுவனங்கள் உடனுக்குடன் இதுபோன்றவற்றை தருவிப்பதன் அவசியத்தை  உணர்ந்துள்ளனர். முதலில் வருபவர்க்கே முதற் சலுகை எனும் நிலை இப்போது விறுவிறுப்பான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திறந்த கொள்கைகளை உலகமயமாக்கல் முன்னிறுத்துவதால், வர்த்தகம், மூலதனம், தொழில் நுட்பம், தகவல்துறை போன்றவற்றில் இன்னும் பல முன்னேற்றங்களை நாம் எதிர்ப்பார்க்கலாம். 

ஒன்றுக்கொன்று உதவிக்கொள்வதன் மூலம் நடைமுறைக்குச் சாத்தியமான பல திட்டங்களை உலக நாடுகள் இப்போது பகிர்ந்து கொண்டு அமுல்படுத்தத் தொடங்கிவிட்டன.





No comments:

Post a Comment