Wednesday 22 August 2012

பாம்பும் ஏணியும், பாலகர் விளையாட்டு. . .

'ஸ்நேக் அன்ட் லெடர்'    என்பது 10 X 10 : 100 கட்டங்களைக் கொண்ட ஒரு விளையாட்டு.

இதன் கட்டங்களுக்கிடையே சில பாம்புகளும் சில ஏணிகளும் இருக்கும். இரண்டு பகடைக்காய்களைப் போட்டு  வரும் எண்ணிக்கையில் எத்தனைக் கட்டங்களுக்கு முன்னோக்கிச் செல்வது என  நிர்ணயிக்கப்படும்.


இவ்விளையாட்டை தமிழில் 'பரமபதம் ஆட்டம்' என அழைக்கிறோம்.

பாம்பினால் கடிபடாமல் மேல் நோக்கிச் சென்று 100 என்னும் இலக்கை அடையவேண்டும். அப்படி கடிபடும் போது கீழே பாதாளத்திற்கு தள்ளப்படுவோம்.

அதே நேரம் ஏணி இருக்கும் எண்ணுக்கு நாம் வீசும் பகடைக் காய்களின் எண்ணிக்கை இருந்தால் மிக எளிதில் மேல் நிலையை அடைந்து விடலாம்.

முதலில் 100 எனும் எண் கொண்ட  இலக்கினை சென்று அடைபவரே வெற்றியாளர் ஆவார்.

பாலகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக இது திகழ்ந்தாலும் அரசியலில் உள்ளோரும் இதன் சூட்சுமத்தினை   தங்களின்     முன்னேற்றத்திற்கு உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள்.

ஏணியை பயன்படுத்தி மேலேறுவதைப் போல, அடுத்தவரைப் பயன்படுத்தி அரசியலிலும் மேலேறுகிறார்கள். எந்த அரசியல் தலைவரும் நிறந்தரமாக மேலேயே தங்கியதை பார்த்ததில்லை நான். பரமபதத்தினைப் போல, தவறி விழுவோரும், தவற்றால் விழுவோரும் அரசியலில் இன்றளவும் இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment