Tuesday 5 March 2013

சொதப்பல்கள் பலவிதம்..

 'காதலில்    சொதப்புவது    எப்படி?'       திரையில்    ஒரு    காட்சி....

வளரும் காலத்தில் கல்வியில் தொடங்கி, பருவ காலத்தில் காதலிலும், மத்திம  காலத்தில் வாழ்கையிலும் சொதப்பல் திலகங்களின் சொதப்பல்கள் தொடர்கின்றன. 

காதலர்கள் தனித் தனியேயும், கணவன் மனவி ஒன்றாகவும் இருப்பதென்பதே வாழ்வின் சாராம்சம், நாகரீகத்தின் அடையாளம்.
இன்றைய நிலையோ தலைகீழ் பாடமாக இருக்கிறது.  காதலர்கள் சேர்ந்து வாழ்வதும், மணமானவர்கள் தனியே வாழ விழைவதும்  நகைப்புக்கு உரிய ஒன்றாகி விட்டது தற்போது.  இயற்கைக்கு எதிராக இவர்கள் விடும் சவால்கள் இவை. அதற்கு இவர்கள் அடுக்கும் காரணங்கள் சொல்லில் அடங்கா.

இவ்விரண்டு செயல்களுமே  தவறுகளையும்,  பாவங்களையும் அதிகரிக்கும் சிந்தனை மாற்றத்தின் எதிர்மறையானவையாகும்.

 

No comments:

Post a Comment