Wednesday 27 March 2013

வாழ்ந்தாலும் ஏசும்....


உலகம் பொல்லாதது... நீங்கள் எப்படித்தான் வாழ்ந்தாலும் இந்த உலகம் பொல்லாதது.
மு.வ அவர்களின் கல்லோ காவியமோ...எனும் நாவலின் துவக்க வரிகள் இவை. எப்படி பிரமாதமாக பொருந்துகிறது நாம் வாழ்வினில் இன்று.  நல்லவனாக வாழும்போது பொறாமைப் படுகிறார்கள். வாழும் நிலை தவறி கீழே விழும் போது தூற்றுகிறார்கள்.

ஆக எப்படிப் பார்த்தாலும் நாம் எந்த நிலையில் இருந்தாலும் ஒரு சாரார் குறை சொல்வதை தங்களது கொள்கையாகவே கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

அதை தெரிந்து உணர்ந்து அதனை ஒரு பொருட்டாக மதியாமல் நம் வாழ்வு நம் கையில் எனப் போவதே நாம் வாழ்வின் வெற்றிக்கு நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று.

No comments:

Post a Comment