Friday 22 March 2013

திருவிழா கால நாடகங்கள்...

1975ல் டுசுன் டுரியான் தோட்ட துரோபதை அம்மன் ( தொங்கா மோரிப் )  ஆலய  தீமிதி உற்சவத்துக்கு முந்திய நாள் நடைபெற்ற மஹாபாரத நாடகத்தில் துரியோதனாக தேவேந்திரன் ( இடம் ), பீமனாக திரு ராமசாமி ( வலம் ) மற்றும் நடுவில் அர்ஜுனனாக திரு முருகேஸ் ( ஓ. பி. ஆர். எஸ் )ஆகியோர்  தோன்றி நடித்த ஒரு காட்சி.


சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். அதன்படி மலேசியாவில் ஆங்காங்கே நடத்தப்பட்ட தோட்டப்புற நாடகங்கள் நமது   கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்தது நாம் கண்ட உண்மை...

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வந்த தீமிதி திருவிழா, அதற்கு முதல் நாள் இடம்பெற்ற நாடகம் போன்றவை காலத்தாலும்  மறக்கவியலா பசுமை நினைவுகளை கொண்டவைகளாகும்.

 நாடக கலை என்பது இப்படி திருவிழாக் காலங்களில் இடம்பெற்றே வளர்ச்சியடைந்திருக்கிறது. 

1974ம் ஆண்டு முதல் பீமன் வேடத்தில் நடித்து புகழ் பெற்ற திரு ராமசாமி அவர்களை சந்தித்து உரையாடினேன்....

என்றும் இனியவை என அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட தகவல்களை இனி அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்...


No comments:

Post a Comment