Thursday 27 September 2012

டத்தோ செல்வமணி அங்கிள் அவர்கள்


சுமார் 24 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது. டத்தோ செல்வமணி ( அன்கிள் )  (  நடுவில் நீள டி சட்டையில் இருப்பவர் ) அவர்கள் குடும்பத்தினரோடு எனது மாமனார் குடும்பமும் நல்ல நட்பை பாராட்டிய காலம் அது.

எளிமையான ஒரு ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, ஜாதி இனம் மதம் என வேறுபாடு பார்க்காமல் எலலோருக்கும் கற்பித்து, தகுந்த நேரங்களில் எதிர்பார்க்காத உதவிகளையும் செய்து பல்லின மக்களின் மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவராக வீர நடை போடுகிறார் எங்களின் பாசத்துக்குரிய அங்கிள் டத்தோ செல்வமணி அவர்கள்.

ஒவ்வொரு ஆசிரியர் தினத்தின் போதும் டத்தோ அவர்களைப்பற்றி அவரின் முன்னாள் மாணவர்கள் நாளிதழ்களில் அறிக்கை விடுவதும் வாழ்த்துக்கள் சொல்வதும் அவரின் பெருமைகளை மனமுவர்ந்து வெளிப்படையாக பேசுவதும் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இணையமைச்சர்கள், அரசாங்க பதவியில் இருப்போர், ஏராளமான ஆசிரியர்கள் இப்படி இவரின் முன்னாள் மாணவர்கள் பட்டியல் மிக நீளமானது. இவரைப் பற்றி சில புத்தகங்களும் வெளிவந்திருப்பதை அறிகிறேன்.

இப்புகைப்படத்தினை பார்க்கும் பொழுதெல்லாம் அவரின் சுய நலம் கருதாது அற்றிய தொண்டே என் கண்களுக்கு தெரிகிறது.

No comments:

Post a Comment