Sunday 18 December 2011

ஆடுகள் பலியிடப்படுவது தொடர்கிறது. . .

"இறைவனிடம் வேண்டிக்கொள்வதும், பூஜைகள்  செய்வதும், பிரார்த்திப்பதும் மூட நம்பிக்கைகள் அல்ல. உண்பதும், பருகுவதும், அமர்வதும், நடப்பதும் போன்றே அவையும் உண்மையான செயல்கள் " என மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பது நமக்குத் தெரிந்ததே...

இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இருக்கப்போவதில்லை. ஆனால், அவை என்ன மாதிரியான வேண்டுதல்கள், எவ்வகை பூஜைகள், எப்படிப்பட்ட பிரார்த்தனைகள் என்பதில்தான் பலருக்கும் குழப்பம்.

பெரிய கோயில்களில் இப்போது சைவ உணவே பரிமாறப்படுவதைப் பார்க்கும் போது நாம் அந்த ஒன்றில் மட்டும் தெளிவுடன் இருக்கிறோம் என்று  நினைத்தோம். ஆனால், அதே நேரம், வாரத்துக்கு ஐம்பது, நூறு என ஆடுகள் சிறு தெய்வ வழிபாட்டுக்காக  பலியிடப்படுவதும் இன்னும் நம் நாட்டில் தொடர்கிறது என்பது வருத்தத்தைத் தருகிறது.

அவர்கள் சொல்லும் காரணங்கள் பல மாதிரியாக இருந்தாலும், மக்கள் இன்னும் மாறவில்லை என்றே படுகிறது.

No comments:

Post a Comment