Monday 5 December 2011

கற்க வேண்டியது தமிழ். . .

தமிழ்ப் புத்தகங்களை படிக்கும் போது வரும் திருப்தி தமிழிலிருந்து ஆங்கிலத்தில்  மொழி பெயர்க்கப் பட்ட ஆங்கில புத்தகங்ளை படிக்கும் போது வருவதில்லை என மற்றவர் கூற கேள்விப் பட்டிருக்கிறேன். இது எவ்வளவு தூரத்துக்கு உண்மை?

தமிழ் தெரியாவிடினும் மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களை படிப்பபவர்களுக்கு  அதன் உண்மையான பொருள் போய் சென்றடைகின்றதா... ?

தமிழ் புத்தகங்களில் உள்ள கருத்துக்கள் மொழிபெயர்க்கப் படும்போது, அதன் அசலான புத்தகத்தில் உள்ள  நிஜ அர்தத்தை தருவதில்லை. சற்று மாறுபட்டு,  வேறு புதிய அர்தத்தை தறுவதாக அமைந்து விடும் சில நேரங்களில். இதை நான் படித்த சில மொழிமாற்று புத்தகங்களிலிருந்தே தெரிந்து கொண்டேன்.

மொழிமாற்றுப் புத்தகங்களைத் தருவதில் ரா. கி. ரங்கராஜன்  கைதேர்ந்தவர். ஆனாலும் அவரது திறமை முழுவதும் அவர் ஆங்கில நாவல்களை மொழி பெயர்ப்பதிலேயே செலவிட்டு விட்டதாக படுகிறது. தமிழிலிருந்து எதுவும் அவர் ஆங்கிலத்துக்கு தந்தாரா என்பது சரிவர தெரியவில்லை.



தமிழ்மொழியில்  மட்டுமே இலக்கியங்களின் நளினத்தையும் அதன் உற்கூறுகளையும்  உணர முடியும்.  எழுத்தாளர்களின் எண்ணத்தை அவர்கள் எழுதிய மொழியில் படிப்பதனால் மட்டுமே அவர்களின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும். சங்ககால இலக்கியங்களின் நேரடி மொழிபெயர்ப்பு என்பது அதன் ஓரளவு அர்தத்தை தரக்கூடியதாக இருக்குமேயன்றி, அதன் இயல்பு நடை முற்றிலும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால், படிப்பவர்களின் ஆங்கில அறிவும் மொழி மாற்றத்திற்குரிய சரியான வார்தைகளின் பொருளை புறிந்து கொள்ளும் திறனும் வேண்டும். இவ்விரண்டும் சரிபட இல்லையேல் இலக்கியத்தின் நுட்பங்களை உணறும் தன்மை கெட்டுவிடும்.

எனவேதான் தமிழ் காப்பியங்களையும் கவிதைகளையும் படிக்க தமிழ் அறிவு அவசியம் தேவை என பெரியோர் கூறி வைத்துள்ளனர்.

கல்வியில் தேர்ச்சிக்காக மட்டுமல்ல, தமிழில் புதைந்து கிடக்கும் கோடானுகோடி உயர்தர சிந்தனைச் செல்வத்துக்காவும் நாம் தமிழ் கற்பது அவசியம்.  இல்லையேல், “பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம்” என்னும் பட்டியலில் நம் பெயரும் இடம் பெற்றுவிடும்.

அன்மையில், தமிழ் நாட்டின் சென்னை மாநகரில் இருக்கும் சில புத்தக பதிப்பகங்களுக்கு சென்று வந்தேன். நிறைய புத்தகங்கள்.... எல்லா தலைப்புகளிலும்  வைத்திருந்தார்கள்.

"உங்கள் தேவை என்னவென்று சொல்லுங்கள், அதற்குச் சரியான பொருத்தமான புத்தகங்களை நாங்கள் தருகிறோம்" என்றனர் வானதி மற்றும் நர்மதா பதிப்பகத்தார்.


 உண்மை.... நான் சொன்ன சில குறிப்புகளிலேயே எனக்கு வேண்டியவற்றை அவர்கள் எடுத்து வைத்துவிட்டனர்.  அதுமட்டுமல்ல, 39 வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்த புத்தகத்தையும் உடனே எடுத்துத்தந்து எனதார்வத்தை தணித்தார்  நர்மதா பதிப்பகத்தின்  திரு சிவா ( படத்தைக் காணவும் ).


மத நூல்களில் மிளிர்கின்ற வாழ்க்கையின் தத்துவ ரகசியங்கள் பொதுவாக தமிழ் படிக்காதோருக்கு தெரியாத காரணத்தினால் நம் மதத்தினை மற்றவர்கள் முன் தற்காக்க இயலாமல் போகின்றது.

இந்த அடிப்படையில்தான்  மத அறிவில் சுனக்கம் ஏற்படும் போது நம் மதத்தின் பண்புகளை உணறாமல் மற்ற மதத்திற்கு தாவுகின்றனர்.

ஆன்மீகத்தில் ஒருவருக்கு எழுகின்ற எல்லா சந்தேகங்களுக்கும் தமிழ் நூல்களில் விளக்கங்கள் உண்டு. கற்றறிந்து அதன்படி நடந்து கொள்வது நமது கடமை.

ஷொட் கட்”  மூலம் இதைத் தாண்டிச் செல்ல நினைப்பது கையிலிருக்கும் பழத்தை விட்டுவிட்டு உயரே தொங்கும் காயை எட்டிப்பறிக்க முனைவது போலாகிவிடும்.

“ஒர்  எல்ஸ்  இட்  வில்  கொஸ்ட்  யு டைம்,  மணி  என்ட்  எப்பட்தோஸ்  வித்  எடுகுவட்  ஐக்கியூ  ஆர்  லெர்னிங்  டெமில்  நாவ். ஜாய்ன்  தெம்.  டோன்ட்  லிவ்  டு  ரிக்ரெட்  இட்  லேட்டர்.”

No comments:

Post a Comment