Wednesday 22 January 2014

தேவை, துணிச்சலும் தன்னம்பிக்கையும்...

தன்னம்பிக்கை பல சாதனைகளைச் செய்ய உந்துதல் சக்தியைத் தரவல்லது.

பல்லாயிரம் பேர் இருந்தாலும் யாரொருவர் ஓடி ஒளியாது, மற்றவர் முன்னால் துணிச்சலுடன் வந்து தான் நினைக்கும் கருத்தை முன்வைக்கிறாரோ, அவர் அனைவராலும் வரவேற்கப்படுவார். துணிச்சல்தான் வெற்றியின் முதல் படி. அந்த துணிச்சலுக்கு  தேவை, தன்னம்பிக்கை.

 நம்மைவிட மற்றவரிடத்தில் நல்ல செயல்திட்டங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை தன்னுள்ளேயே ஒருவர் வைத்திருப்பாரானால் அதனால் அவருக்கும், மற்றோருக்கும் என்ன பயன்?

படிக்கத் தெரியாதோருக்கு கீதையும் ஒரு தலையணை மட்டுமே என்பதற்கிணங்க, வெளிக்கொணர முடியா சிறப்புத்திட்டங்கள் எதுவும் நன்மை பயக்கப்போவதில்லை.

"எனக்கு என்னவோ, ஒருவித கூச்சம் உடனிருந்து என் செயல்களைத் தடுக்கின்றது...அதனால் மற்றவர் முன்வர தயங்குகிறேன். அவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ...? " என்பது, நாம் எங்கும் கேட்கும் பலரின் தேசிய கீதம். " எனக்கு வெட்கமா இருக்கிறது, என்னால் முடியாது..." என்பதைச் சொல்ல யாரும் வெட்கப்படுவதில்லை.

இது தேவையற்ற வீண் பயம். அடுத்தவர் எதைச் சொன்னால் நமக்கென்ன? நாம் வெற்றிபெற்றால் அவர்களே நம்மை புகழவும் செய்வார்கள் எனத் தெரியாதா உங்களுக்கு?

No comments:

Post a Comment