Wednesday 8 January 2014

மனதைக் கவரும் ரோஜா...


 மனித மனங்களைக் கவரும் சிலவற்றுள் மலர்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. பொதுவில் எல்லோருக்கும் மலர்களும் அதன் வாசனையும் பிடிக்கும். மல்லிகை ஆர்க்கிட், தாமரை, அல்லி என்பவையோடு ரோஜாவும் ஒரு முக்கிய மலராக கருதப்படுகிறது.

தற்காலத்தில் மற்றவைகளைவிட ரோஜாதான் இளம் வயதினரிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.... காதலர் தினத்தில் பார்க்கவேண்டுமே ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் நிலையை...

யாரையும் வசீகரிக்கும் மனமும் குணமும் கொண்டது ரோஜா. இதை யாரும் மறுபதற்கில்லை... அழகிய அதன் இதழ்கள் மனதுக்கு இதமனவை...

புத்ரா ஜயாவில் ஆண்டுதோரும் நடந்தேரும் ஃபுலோரியா புத்ராஜயா மலர்க்கண்காட்சியில்  பலவண்ண ரோஜாக்களைக் காணலாம்.  பல நாடுகளில் இருந்து அவர்களின் சிறந்த தேர்வுகளாக தருவிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு சுமார் இரு வார காலம் வைக்கப்பட்டிருக்கும்.

No comments:

Post a Comment