Wednesday 1 January 2014

விநாயகரை வழிபட்டு புத்தாண்டை தொடங்குவோம்...


ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை 
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே

ஸ்ரீராமர் தான் வழிபட்ட ரங்க நாதர் விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் ஸ்ரீரங்கம் பகுதியை அடைந்த போது மாலை நேரமாகி விட்டது. மாலைச்சந்தி கர்மங்களைச் செய்ய வேண்டுமே என விபீஷணன் யோசித்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் எதிரே வந்தார். அந்தச் சிறுவனிடம் சற்று நேரம் விக்ரகத்தைக் கையில் வைத்திருக்குமாறு கொடுத்த விபீஷணன் ஆற்றங்கரை நோக்கிச் சென்றான். 

அவன் திரும்பிவந்து பெற்றுக் கொள்வதற்குள் அதைத் தரையில் வைத்துவிட்டார் விநாயகர். அது அங்கேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த் தெடுக்க எவ்வளவோ முயன்றான் விபீஷ்ணன். ஆனால் இயல வில்லை. அந்த ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். பின்னர் உண்மை யறிந்து வணங்கிச் சென்றான்.
அவ்வாறு கோயில் கொண்டவரே ஸ்ரீரங்கநாதர். 

திருச்சி மலைமீதிருக்கும் உச்சிப்பிள்ளையாரே இந்தத் திருவிளையாடல் புரிந்தவர். அவர் தலையில் குட்டுப்பட்ட தழும்பு இருப்பதைக் காணலாம்.
( இணையத்தில் படித்தது... தொடர்ந்து படிக்க http://vidhai2virutcham.com/ )

No comments:

Post a Comment