Monday 23 December 2013

நாளை எம்.ஜி.ஆர் நினைவு நாள்...


அவர் மறைந்தும் இன்னும் மறையாதிருக்கும் அவரின் சேவைகளை மலேசிய எம்ஜிஆர் பொது நல அமைப்புக்கள் பார்த்துக்கொள்வது பாராட்டத்தக்கது... எம்ஜிஆர் இல்லாது போனாலும், அவர் பெயரில் ஏழை எளியோர் நலனடைகின்றனர் இதுபோன்ற அமைப்புகள் மூலம்.

அவர் புகழும் பெருமையும் பலவித பொதுச் சேவைகளினால் எம்.ஜி.ஆர் பொது நல மன்றங்கள் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் பெயரில் ஏழை எளியோர் இன்னும் உதவி பெற்றுக்கொண்டிருப்பது அந்த பொன்மனச்செம்மலுக்கு நாம் அளிக்கும் உன்னத நிலையாகும்.

இந்த உலகம் உள்ளவரை அவரின் நினைவு நம் மனதில் இருந்துகொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை...

வாழ்க எம்.ஜி.ஆர் சேவையும் தொண்டும்...

No comments:

Post a Comment