Friday 20 December 2013

ஆன்மீக அறிவை ஊட்டுபவர்கள் குருக்கள்...


எங்கும் எதிலும் சந்தேகங்கள் எழலாம். ஆனால், சமய போதனைகளிலுமா சந்தேகம்...? ம்ம் ஒருவேளை, சமயத்தில்தான் அதிக சந்தேகங்களோ?

அப்படி எழும் அந்த சமயக் கேள்விகளுக்கு விளக்கங்கள் தருபவர்களே 'குருக்கள் அல்லது குருமார்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

ஐயமற அறிவு புகட்டும் அவர்களுக்கு பெற்ற தாய் தந்தையைப் போன்றதொரு உயர்ந்த இடம் நம் இந்து மதத்தில் உண்டு. அஞ்ஞான, விஞ்ஞான சந்தேகங்களைப் போக்கி நமக்கு மெய்ஞானத்தை ஊட்டுபவர்களாக குருவிற்கு உன்னதமான ஓரிடம் தந்திருக்கிறோம்..

ஆனால், அது 'குரு' அளவு மட்டுமே அந்த உயர்ந்த இடம், அதற்கு மேலில்லை. அவர்களை இறைவனாக பார்ப்பது தவறு. இறைவன் மட்டுமே இறைவனாக முடியும். மனிதர்கள் அல்ல. அப்படி இருக்க, செய்வதென்னவென்றறியாது சிறு பிள்ளைத்தனமாக குருக்களை தெய்வமெனக்கொள்வது ஆன்மீகத்துக்கு   நம் அறியாமையினால்  செய்யும் பாவம்.

No comments:

Post a Comment