Wednesday 29 February 2012

காலம் மாறலாம். . .



காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.  எங்கே என்ன நடந்தாலும் அது அதனுடைய செயல்களை செய்துகொண்டுதான் இருக்கிறது. 

60களிலிருந்த சூழ்நிலைகள் இப்போது இல்லை. எல்லாமும் நவீனமாகிவிட்டது போன்ற ஒரு பிரம்மை. உண்மையும் அதுதான். எல்லாமும் வித்தியாசமாக வேறுவிதமாக ஆகிவிட்டன.

மாற்றம் ஒன்றே மாறாதது என சான்றோரின் சொல் எவ்வளவு நியாயமானது.
சில தானாக மாறுகின்றன. சில மாற்றப்படுகின்றன. சிலர் அவர்களாகவே மாறுகின்றனர், சிலர் கட்டாயமாக மாற்றப்படுகின்றனர்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளும் தேவைகளும் தான்  மாற்றத்திற்கு பிரதானமான ஒன்றாக அமைகின்றது. ஆனால் இந்த மாற்றங்களும் நிரந்தரமல்ல... என்றேனும் ஒரு நாள் இவைகளும் மாறும்.

காலம் மாறலாம், நமது கலாச்சாரம் திசைமாறிச் செல்லாமல் பார்த்துக் கொள்வது நமது கடமையாகும்.

( மேலே படங்கள்: சும்மா ஒரு மாற்றதுக்காக. . .)

No comments:

Post a Comment