Sunday 5 February 2012

செல்வகுமார் @ செல்வம். . .

சகல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்த ஒருவர், செல்வம்.
தனக்கு சம்பந்தமில்லாத துறையானாலும் அதையும் தெரிந்து கொள்வதில் இவர் எப்போதும் ஆர்வம் காட்டினார்.

கம்ப்யூட்டர் ஆர்வம் இவரிடம் மிக அதிகளவில் இருந்ததினால், புது பொருட்களையும், புது யுக்திகளையும் மற்றும் சுடச்சுட செய்திகளையும் இவர் மற்றவர்களைவிட முன்கூட்டியே தெரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு சொல்லித்தந்தார்.

தான் செய்த எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியவர் இவர்.


35 வருட பழக்கமானாலும், தொலைபேசியில் அழைத்த ஒவ்வொரு முறையும் "ஹல்லோ மிஸ்டர் மணி.." என தனது உரையாடலைத் துவங்கி தனது கணத்த குரலுக்கு ஒரு முத்திரையைப் பதித்த எனது இனிய நண்பர் இன்று நம்மோடு இல்லை.

 

செல்வமும் நானும் எங்களின் 35 வருட நட்பின் போது என்னவெல்லாம் செய்தோம் என்று திரும்பிப் பார்ப்பது மனதுக்கு நிறைவான ஒன்றாகவே இருக்கிறது.

எங்களுக்குள்ளும் சின்னச் சின்ன பிணக்குகள் தோன்றியிருக்கின்றன. ஆனால் அவை பெரிய சண்டைகளாக உருவெடுத்ததில்லை. தவறுகளை சரிசெய்து நட்பின் ஆழத்தை உறுதி படுத்தியிருக்கிறோம் இத்தனை காலமாக.








நடக்கும் ஒவ்வொரு நொடிக்குள்ளும் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள், அதிர்ச்சிகள் ஒளிந்திருக்கின்றன.

இப்படி அடுத்த நொடியில்  என்ன நடக்கும் என்று தெரியாத மர்மம் தான் வாழ்வின் சூத்திரமோ?

3.2.2012 மாலை செல்வம் மாரடைப்பால் காலமானார்.

மனம் சொல்லமுடியாத துயர்கொள்கிறது...

மரணம் இயற்கை என்பது தெரிந்திருந்தாலும், ஏற்றுக்கொள்ள வழி தெரியாது உள்ளம் தவிக்கிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவாராக.

ஓம் சாந்தி...

It was so shocking and saddening to hear the sudden news of Selvam passing away.  Unexpected and without a warning, he left this world on 3rd of Feb 2012. 
He was a helpful and joyful a person, someone you could count on anytime to make matters light and easy.
Those around him are still finding it difficult to believe that he is no more now.... Unfortunately, thats the bitter fact and we have to live with from now on.

We bemoan that he passed on too young in disbelief.

SELVAM ....   we salute you for being a wonderful person.

REST IN PEACE MY DEAR FRIEND....

No comments:

Post a Comment