Wednesday 15 February 2012

எனது நண்பரைப் பற்றி நான்...

திரு. செல்வகுமார்  கலியபெருமாள்
தோற்றம்    :  07.10.1956       மறைவு      : 03.02.2012
உள்ளும் புறமுமாக இருக்கும் மனிதர்கள் மத்தியில் உள்ளம் நினைப்பதை உதட்டில் சொல்லிய நேர்மையான சிலரில் ஒருவர்.
திட்டிக்கேட்கும் நேரம் செல்லமாக தட்டிக்கேட்ட நண்பர்.
எண்ணம்போல் வாழ்வு என்பதற்கொப்ப தான் நினைத்தபடி வாழ்ந்தவர்.

பண்பும் பாசமும் நிறைந்த பண்பட்ட மனிதர்.
எங்களின் கலந்துரையாடல் பலவற்றை பற்றி இருக்கும்.  அரசியல், பொருளாதாரம், விவசாயம், மக்கள் நலன் பற்றிய பொது விஷயங்கள்  என்றில்லாமல் ஓய்வு நேரத்தில் கருத்தான, கவிதை தரம் நிறைந்த தமிழ்ப்பாடல்களையும், தமிழ்ப்படங்களையும், கம்ப்யூட்டர் வலைத்தளங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருப்போம்.

என்னுடையது போலவே அவருக்கும் ஒரு வலைத்தளம் இருந்தது. தனது எண்ணங்களை அதில் அவர் எழுதி வந்தார்.
 இனிமையான நாட்கள் அவை.  மீண்டும் வருமா???
-  எஸ்.மணிராஜ்

No comments:

Post a Comment