Tuesday 4 February 2014

சொல்வது போல நடப்போம்...

நாம் போற்றி மதிக்கும் விசயங்கள் வேறு, நாம் செய்யும் காரியங்கள் வேறு என இருக்கும் வரையில் சந்தோசம் என்பது நம்மை விட்டு சற்று விலகித்தான்  நிற்கும்.

சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்போர் நம்மிடையே பலர் உண்டு. உத்தமர்கள் போலவும், செயல் திட்ட வாதிகள் போலவும், அனைத்தையும் தாங்கள் சுலபமாக செய்து வீழ்த்திடும் திறன் கொண்டோர் போலவும் நம் முன் நடந்துகொள்வார்கள் பலர். ஆனால், அவர்களது செயல்களை கூர்ந்து நோக்கினால், " அடப் பூ... இவ்வளவுதானா இந்த ஆள்..?" என்று நம் மனதில் தோன்றும்படி இருக்கும்.

பரிசுத்த "சிரிம்" முத்திரைப்படி வாழ்வினில் சொல்வது போல் செய்பவர்களும் செய்வது போல் சொல்பவர்களுமே நல்ல மனிதர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களிடமே உண்மை மகிழ்ச்சி குடிகொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment