Wednesday 3 July 2013

கல்வி கற்பதில் பெண்கள்...

கல்வி கற்றவர்களின் வளர்சியை வைத்தே ஒரு குடும்பத்தின் முன்னேற்றம்  அளவிடப்படுகிறது.

ஆரம்பக் கல்வியிலிருந்து இடை நிலை பள்ளிகளில் கற்கப்படுவது கட்டாயக் கல்வியாக இருந்தாலும்,  பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க தேர்வு பெறும் ஆற்றலே தனியொரு நபரை வெற்றிபெற்றவராக காட்டுகிறது. இதனால் அவர் சார்ந்த குடும்பமும் நாடும் பலனடைகிறது.

பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதில் கூட ஆண் பெண்  என பேதம் கொண்டிருந்தோம் முன்பு. இப்போது அந்நிலை மாறிவிட்டது. உண்மையில் ஆண்களைவிட பெண் குழந்தைகளே கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். மலேசிய அரசாங்கம் அறிவித்த புள்ளி விவரங்களைப் பார்க்கையில் 5ம் படிவம் முடிந்து மேல் படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் ஆண் பிள்ளைகள் 32% என்றும் பெண் பிள்ளைகள் 68% என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் இருந்து விடுபட்டு பெண் கல்வித் திட்டத்தில் நாம் முன்னேறி விட்டோம் என்பதையே இது காட்டுகிறது. முன்னேறி விட்டோம் என்றாலும் முற்றாக வெற்றி பெற்று விட்டோம் எனவும்  சொல்வதற்கில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியதிருக்கிறது.  காரணம், இன்னும் ஒரு சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியின் மதிப்பும் முக்கியத்துவத்துவமும் அவர்களின் வாழ்வில் எவ்வளவு இன்றியமையாதது என சொல்லித்தராதது நமக்கு பளிச்செனத் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

ஒரு ஆண் கற்றவராக போற்றப்பட்டால் அது அவருக்கும் அவரைச் சார்ந்த குடும்பத்திற்கும் நன்மையாக அமையும். அதுவே ஒரு பெண் படித்திருந்தால் அது அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவரின் சந்ததிக்கே பெரும் பலமாக கருதப்படும். இதுபெரியோர் வாக்கு. இதில் பொதிந்திருக்கும் உட்கருத்தினை எண்ணிப்பார்க்கவேண்டும்.

பல துறைகளில் நம் சமூகத்தியப் பெண்கள் இப்போது வெற்றிக்கொடியைப் பறக்கவிடத் தொடங்கி விட்டனர்,  அவற்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியத் தொழில் ஒரு முக்கிய உதாரணமாகும். இன்னும் பல்வேறு செயல்திட்டங்கள் கொணரப்படவேண்டிய அவசியம் இருக்கிறது.

ஒருகாலத்தில் அரைகுறை படிப்புடையோருக்கு தொழிற்சாலைகள் கை கொடுத்தன. இப்போது அன்னியத் தொழிலாளர்களின் வரவால் அந்தச் சலுகை நம்மை விட்டுப்போய்விட்டது, நாம் பின்னுக்கு தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது. இதிலிருந்து மீள குடும்பத்தினரின் பங்களிப்பு இன்னும் அதிக அளவில் தேவை.

கல்வி ஒன்றே பெண்களுக்கு சரியான பாதுகாப்பாக அமையும். அதை பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியோரின் கடமை. இவர்களை ஊக்கப்படுத்தவும், கல்வியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெரியோர் ஆசி என்றென்றும் தேவை.

சில இடங்களில் பெண்கள் முன்னேற்ற முகாம் என சில பொது நல அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதர விசயங்களோடு கல்வியின் சிறப்பு பற்றியும் இங்கு பேசுவதுண்டு. ஆயினும், கலந்து கொள்ளும் பெண்மணிகளில் சிலருக்கு இங்கு கிடைக்கும் நிதி உதவியே அவர்களின் இலக்காக படுகின்றது. இதனாலேயே பலர் இது போன்ற அமைப்புக்களில் அங்கத்தினர்களாகவும் பதிந்து கொள்கின்றனர். கிடைக்கும் உதவிகளை பெண்கள் நன் கு பயன் படுத்திக்கொள்ளவேண்டும். பணத்துக்காக மட்டுமல்ல, வணிகத் துறையில் கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் துணிச்சலோடு ஏற்று தொடர்ந்து செல்லும் மனப்பக்குவம் வேண்டும். அதற்கு அவர்களுக்கு பக்கத் துணையாக ஓடோடி வருவது, கல்வியறிவு. கல்வி கற்பதென்பது பள்ளிக்கு அப்புறமும், பட்டம் பெற்ற பின்பும் கூட தொடர வேண்டும்.

பண்பு, நல்ல பழக்க வழக்கம், பொருளாதாரத்தில் முன்னேற்றம் எனத் தங்களை உயர்த்திக்கொள்ளும் பெண்களே சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment