Wednesday 3 July 2013

கண்டிப்பு...

கண்டிப்பு என வரும்போது "அவர் என்ன உத்தமனா? பெரிதாய் கண்டிக்க வந்துவிட்டார்..? என ஒரு பிரிவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

உண்மையில் பல குடும்பங்களில் இளையோரோடு குடும்பத் தலைவர்கள் இந்தவித தர்க ரீதியில்தான் தொடர்பு கொள்ளும் சூழ் நிலைகள் அமைகின்றன. காலம் கடந்த கண்டிப்பும் இதற்கு ஒரு காரணமாகும். பிள்ளைகள், பொதுவில் ஆண் பிள்ளைகளே இப்படி ஒரு கேள்வியுடன் பெற்றோரை எதிர்க்கிறார்கள்.

தந்தை தவறு செய்திருக்கலாம்....அதை எதிர்க் கேள்வியாக பிள்ளைகள் கேட்பது எந்த வகையில் அவர்களுக்கு ஞாயம் எனப் படுகிறதோ, தெரியவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் நீதிபதியை பார்த்து " நீங்கள் உத்தமர்தானா?" எனக் கேட்பதில்லை.

தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொள்ளும் மாணவர்கள் ஆசிரியரைப் பார்த்து " நீங்கள் உத்தமனா?" எனக் கேட்பதுண்டா?

அலுவலகங்களில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் மேல் அதிகாரியை " நீங்கள் உத்தமனா?" எனக் கேட்க நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என எண்ணிப்பாருங்கள்.

கொள்ளையடிக்கப்படும் இடத்துக்கு வரும் போலிஸ்காரர்களைப் பார்த்து " நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா?" எனக் கேட்டு குற்றவாளி ஜாலியாக அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை.

இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆயினும் குடும்பத்தலைவராக இருக்கும் தந்தை கண்டிக்கும் போது மட்டும் எப்படி " நீங்கள் உத்தமனா? என்னைக் கண்டிக்க உங்களுக்கு என உரிமை இருக்கிறது என இன்றைய சில இளைஞர்களால் கேட்கமுடிகிறது?

பெற்றோர் வளர்ப்பில் நேர்ந்த குறை என முடிப்பதை விட வேறென்ன சொல்ல இருக்கிறது?

இளம் பெற்றோர் கவனிக்க வேண்டியது இது. குழந்தைகளை அன்பு, பண்பு, பாசம் என வளர்க்கும் அதே நேரம், சற்று கண்டிப்புடனும் இருங்கள். அதிக செல்லம் அவர்களை கெடுக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்.

No comments:

Post a Comment