Wednesday 10 July 2013

12வது உலகத் தமிழ் இணைய மாநாடு...

மலாயாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பிரிவு ஏற்று நடத்தும் ஒரு பெரிய நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நடைபெறவிருக்கும் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு.

அன்மையத் தகவல்களின் படி இந்நிகழ்வில் சுமார் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் கலந்து கொள்வர் என ஏற்பாட்டாளர்கள் எதிர்ப்பார்ப்பதாக தெரிகிறது. உண்மையில் 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இங்கு நம் நாட்டில் இடம்பெறும் இம்மாநாட்டினை பலரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இது  தித்தியான் டிஜிட்டல் ஆதரவில் நடைபெறுகிறது. 

கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் எனும் மும்முனைகளில் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வானது அனைவருக்கும் பயனுள்ள ஒன்றாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

'கையடக்கக் கணினிகளில் தமிழ் கணிமை" என்பது மையக்கருப்பொருளாக இவ்வாண்டு திகழ்வதால், இதச் சார்ந்த பல சுவாரஸ்யமான ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வாளர்கள் சமர்ப்பிப்பர் என நம்பலாம்.

ஐபேட், ஐபோட் எனப்படும் பலகைக்கணினிகளில் தற்போது தமிழ் தலை நிமிர்ந்தபடி உலா வரத்தொடங்கிவிட்டது. இதன்வழி ஆயிரக்கணக்கில் தமிழில் மின் நூல்கள் நாம் படித்து மகிழக் கிடைக்கின்றன. தரவிறக்கம் செய்து நமது வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ள தமிழ்ச்செயலிகள் இப்போது கைபேசியிலும், பலகைக் கணினிகளிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

பல தரமான மின் நூல்களுக்கு ஒரு சிறு தொகை கட்டனமாக கேட்கப்படுவது அப்படியொன்றும் பெரிய பாதகமான செயலாகப் படவில்லை. இனாமாகவும் பல இருக்கின்றன வாசித்து மகிழ.

தொழில் நுட்பம் வளர்ந்துவரும் இவ்வேளையில் கணினிகளில் தமிழ்ப் பற்றிய பல ஆய்வுகளின் நிலவரங்கள் இந்த மாநாட்டில் நமக்குத் தெரிய வரும். இதுவும் ஆரோக்கியமான ஒரு எதிர்ப்பார்ப்பாகும்.

ஆயினும் இன்னும் ஒரு மாதமே இடையில் இருக்கும் இந்தச் சூழலில்  அதனைப்பற்றிய விளம்பரங்கள் எதுவும் பரவலாக கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டக் காணோம்.


No comments:

Post a Comment