Monday 29 July 2013

காதில் விழுந்த கதைகள் ...1

மூன்று சாமியார்கள் சேர்ந்து ஒரு வாரத்துக்கு மௌனவிரதம் கடைபிடிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். பூஜைக்கு சில மெழுகுவர்த்திகளை வைத்துக்கொண்டு பூஜையை தொடங்கினார்கள்.

முதல் நாள் ஒன்றும் சிறமமாகத் தெரியவில்லை. இரண்டாம் நாள், பலத்த காற்றினால் மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணையத் தொடங்கின.

ஒரு சாமியார், " என்ன இந்த காற்று மெழுகுவர்த்திகளை அணைத்திடும் போலிருக்கிறதே...?" என்று சொல்ல, அவர் தியானம் கலைந்தது.

அடுத்தவர், " சாமி நாம பேசக்கூடாது என்றல்லவா முடிவெடுத்து விரதம் கொண்டோம்" என்று தன்னையுமறியாது முதல் நண்பருக்காக வருந்தினார். அவரும் தியானத்தில் இருந்து வெளியேறும்படி ஆயிற்று.

அவ்விருவரின் தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மூன்றாவது சாமியார், "நாந்தான் கடைசிவரைக்கும் பேசலே" என்றார்.

மற்ற இருவரும், "சாமி இன்னும் 5 நாட்கள் இருப்பதை மறந்துவிட்டு நீங்களும் பேசிவிட்டீர்களே..." என்றனர்.

அடுத்தவர் தவறுகள் நமக்கு மலைபோல தெரியும். அப்படி அவற்றை சுட்டிக்காட்டுகையில், நாமும் அத்தவற்றை செய்யக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment