Friday 5 July 2013

திரை கானங்கள்...

"துன்பக் கடலைத் தாண்டும் போது, தோணியாவது கீதம்"
என்றார் கவிஞர். துன்பத்தில் மட்டுமல்ல, இன்பத்திலும்  நம் துணைக்கு வருவது கீதங்களே.

மதுர கானங்களாக நம் காதுகளில் ரீங்காரமிட்டு நம்மை மகிழ்ச்சிக்கடலில் மிதக்க வைப்பவை இது போன்ற பாடல்களே...


தாமதம் செய்யாதே தோழி
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
தானாக வீடு தேடி தலைவன் வந்த போது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
சரியாக கவனியாமல் இருப்பதும் ஆகாது
தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
கன்னல் சுவை விருந்து அவர் உண்ண வேண்டாமா
களிப்பினிலே சொர்க்கத்தையும் காணவேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
தன்னை மறந்தே அவரும் மயங்க வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா
உன் தலைவி அதை பார்த்து மனம் மகிழ வேண்டாமா

தாமதம் செய்யாதே தோழி
நல்ல தருணத்தை இழக்காதே
சொன்னதை மறக்காதே
தாமதம் செய்யாதே தோழி

 G வரலக்ஷ்மியின் குரலில் என்ன இனிமையாய் ஒலித்தது இப்பாடல்.
மனச்சோர்வுக்கு மருந்து கசக்கும் மருந்துகள் இல்லை. இனிக்கும் நினைவுகளே. அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் நமக்கு நினைவூட்டுவது பழைய திரை கானங்களே. இதோ இன்னுமொன்று...


மாதா பிதா குரு தெய்வம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதாதிருப்பது தீது ஓதாதிருப்பது தீது நாம்
ஒழுங்குடன் பள்ளிக்கு செல்வோம் தப்பாது
ஓதி உணர்ந்தது போலே
ஓதி உணர்ந்தது போலே என்றும்
உண்மையாய் நடந்து உயர்வோம் மண்மேலே

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

காலையில் எழுந்ததும் படிப்பு
காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
காலையில் எழுந்ததும் படிப்பு பின்பு
காலைக் கடனையும் உணவையும் முடித்து
நூலைக் கையிலே எடுத்து
நூலைக் கையிலே எடுத்து பள்ளி
நோக்கி நடந்து கற்பது சிறப்பு

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

தெய்வம் தொழுதிட வேண்டும் நம்
தேசத்தின் மீதன்பு செலுத்திட வேண்டும்
கைத்தொழில் பழகிட வேண்டும் மஹாத்மா
காந்தியின் சொற்படி நடந்திட வேண்டும்

மாதா பிதா குரு தெய்வம் அவர்
மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்
மாதா பிதா குரு தெய்வம்

திரைப்படம்: நான் பெற்ற செல்வம், பாடியவர்: ஏ.பி. கோமளா, இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப்,  இசை: ஜி. ராமநாதன், ஆண்டு: 1956

ழைய திரைகானங்களை கேட்பதில் ஒரு சுவாரஸ்ய உண்மையும் இருக்கிறது.  அதிக அளவில் ஒலியுடன் அவ்வகை கானங்களை நாம் ரசித்து கேட்க முடியாது. ஒலியளவு சுமார் நிலையில் இருந்தால் பாடல்களின் இனிமை கூடுகிறது. 

புதியவை அப்படியள்ள. ஒலி அளவு குறையும் போது பலவித இசைக்கருவிகளின் ஒலி காதுகளில் விழாமலேயே போய்விடுகிறது. ஆனாலும், மற்றவருக்கு உபத்திரவமாக இல்லாதிருக்க காதுகளில் அணியும் ஒலிபெருக்கியின் வழி புதுப் பாடல்களை நம் இஷ்டத்துக்கு கேட்டு மகிழலாம்.
திரைப்படம்: நான் பெற்ற செல்வம்
Singers: A.P. Komala - பாடியவர்: ஏ.பி. கோமளா
Lyrics: K.M. Sherif - இயற்றியவர்: கு.ம. ஷெரிஃப்
Music: G. Ramanathan - இசை: ஜி. ராமநாதன்
Year: - ஆண்டு: 1956 - See more at: http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/naan-petra-selvam/maatha-pithaa.php#.UdcwmX8Z5kQ

No comments:

Post a Comment