Sunday 21 July 2013

நல்ல மனம் வாழ்க...

அடுத்தடுத்து ஐந்து பரம்பரைக்கு சொத்து இருந்தாலும், இன்னமும் அதே வழியில் சென்று கொண்டிருப்போர் நம்மிடையே அனேகர் இருக்கிறார்கள்.

பொருளீட்டும் யுக்தி தெரிந்தவர்கள் என இவர்களை  ஒரு வகையில் பாராட்ட வேண்டியது அவசியம் தான் என்றாலும், இவர்கள் மனது வைத்தால் ஏழைகளில் ஒரு சிலரின் தலைவிதியை மாற்றிட முடியும் என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.

இந்த நற்குணங்களை மனம்தான் நிர்ணயிக்கிறது. சரி என்பதும் இல்லையென்பதும், முடியுமென்பதும் முடியாதென்பதும் ஒரு மெல்லிய நூலிழையில் மனம் எடுக்கும் முடிவினைப் பொறுத்தே அமைகிறது.

'பணம் இருக்கும் இடத்தினிலே மனம் இருப்பதில்லை' எனும் பொய்யான கருத்தினை இவர்கள் உடைத்தெரிய முன் வருவார்கள் என்ற நம்பிக்கை பலருக்கும் உண்டு.

 நம் கண்முன்னே நடக்கும் பல தொண்டுள்ளம் கொண்டவர்களின் திருப்பணியினைப் பார்க்கும் போது இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது.

நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க!!!

No comments:

Post a Comment