Monday 29 July 2013

காதில் விழுந்த கதைகள் ...2

பார்வை தெரியாத ஒருவன் தன் நண்பன் வீட்டுக்குப் போயிருந்தான். நேரமாகிவிட்டபடியால் வீடு திரும்பும் போது அவனுக்கு அவனது நண்பன் ஒரு விளக்கை கையில் கொடுத்து அதை ஏந்தியபடி போகச் சொன்னான்.

" நண்பா, எனக்குத்தான் பார்வை இல்லையே. இது எதற்கு? " என்றான் பார்வையற்றவன்.

" உனக்கிது தேவைப்படாதென்று என்று எனக்கும் தெரியும். ஆனால் உன்மேல் வேறு யாரும் வந்து மோதிடாமல் இருக்க இது தேவைப்படும்" என்றான் நண்பன்.

'அதுவும் சரிதான்' எனப்பட, விளக்கினை ஏந்தியபடி பார்வையற்றவன் திரும்பிக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திலேயே எதிரே வந்தவன் ஒருவன் இவன்மேல் மோத இருவரும் கீழே வீழ்ந்தனர்..

" என்ன சார் நீங்க, முகத்துக்கு முன்னால் விளக்கினை தூக்கிப்பிடித்தாவாறு வருகிறேனே, இதுகூடவா உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை....?என்று கடிந்து கொண்டான் பார்வையற்றவன்.

" ஐயா உங்க விளக்கு அணைந்து வெகு நேரமாகிவிட்டது போலிருக்கிறது...." என்றபடி மோதியவன் அவ்விடம் இருந்து அகன்றுவிட்டான் .

ஒரு சிலர் அறிவுரைகள் ஒரு சில நேரமே நம்மை தாங்கிப் பிடிக்கும். விழிப்படைதலே நமக்கு நிரந்தர தீர்வாகும்.

No comments:

Post a Comment