Wednesday 31 July 2013

நாசி லெமாக்...

காலைச் சிற்றுண்டி என வரும்போது மலேசியர்களாகிய நம்மில் 80 விழுக்காட்டினரின் தேர்வு அ நேகமாக "னாசி லெமாக்"வாகத்தான் இருக்கும். கடைகளில் இதற்கு இருக்கும் வரவேற்பினை வைத்தே இதைச் சொல்லிவிட முடியும்.


கொஞ்சம் வெள்ளைச் சோறு, பாதியாக வெட்டப்பட்ட அவித்த முட்டை, நறுக்கப்பட்ட வெள்ளரிக்காயில் சில துண்டுகள், சிறிதளவு வறுத்த நிலக்கடலை, கொஞ்சமாக நெத்திலி மீன் சம்பள்...ஆகியவையே நாசி லெமாக்வில் இருக்கும் முக்கிய ஐட்டங்கள். ஆயினும் இதன் புகழ் உலகெங்கிலும் பரவிக்கிடக்கிறது.

 சம்பள் என்பது, மசாலாவால் தயாரிக்கப்பட்ட உறைப்பான சாஸ். கோழித்துண்டுகள், நெத்திலி,முட்டை,மீன் போன்றவற்றை அதனுள் போடும் போது அந்த சாஸ் அதன் காரணப்பெயருடன் உண்ணுவோரை அசத்துகிறது. உ.ம்- முட்டைசம்பள், மீன்சம்பல், நெத்திலிசம்பள.



ஒரு காலத்தில் காலைச் சிற்றுண்டியாக மட்டுமே கிடைத்துக்கொண்டிருந்த நாசி லெமாக், தற்போது எல்லா நேரங்களிலும் கிடைக்கும் முக்கிய மலேசிய உணவாக உருமாறிவிட்டது. நாசி லெமாக் இல்லாத உணவகங்கள் இல்லையென்று துணிந்து சொல்லலாம். அவ்வளவு புகழ் பெற்ற உணவு இது.

 விமானங்களில் பயணத்தின் போதும், வெளியூர்களில் முக்கிய நகரங்களிலும் பலர் சமைத்துச் சாப்பிடும் ருசி மிகுந்த உணவாக இது கிடைக்கிறது.


 இரண்டு விதங்களில் நாம் இதை கடைகளில் இருந்து வாங்கலாம். தயார் நிலையில் பாக்கெட்டுகளில் மடித்து வைக்கப்பட்டிருபது ஒரு வகை. மற்றது, பாத்திரங்களில் தனித் தனியே தேவையான ஐட்டங்கள் வைத்திருக்க, நாம் நமக்கு வேண்டியவற்றை நமது ருசிக்குத் தகுந்த படி தேர்ந்தெடுத்து போட்டுக்கொண்டு உண்ணலாம்.


 உணவகங்களில் மட்டுமல்லாது இரவுச்சந்தையிலும், நமது தேசிய நெடுஞ்சாலையில் இருமடங்கிலும் இப்போது கிடைக்கிறது.

கம்பங்களில் வாழை இலையில் மடித்து விற்கப்படுவதே எனது தேர்வாகும். விலையும் குறைவு ருசியும் அதிகம். அதோடு அதிக அளவு கொலெஸ்ட்ரோல் பிரச்சினையும் இருக்காது.



பொதுவாக, வைக்கப்படுகின்ற கோழித்துண்டு, இறைச்சி, மீன் அல்லது இரால் போன்ற உபரி உணவுகளுக்குட்பட்டு இதன் விலையும் இருக்கும் ( ரி.ம 1.00லிருந்து 18.00 வரை ).


No comments:

Post a Comment