Tuesday 6 October 2015

வன்மையானது அழியும் . மென்மையானது வாழும்...

ஒரு குருவின் மரண தருவாயில், சிஷ்யர்கள் சிலர் அவரிடம் ''ஐயா நீங்க போகும் முன் எங்களுக்கு ஏதாவது சொல்லிவிட்டு போங்க'' என இறுதி நிமிட அறிவுரையை கேட்டார்களாம். அதற்கு குரு, சைகையில், தன் வாயை காட்டிவிட்டு இறந்துபோனாராம்
.
விடை தெரியா சிஷ்யர்களோ, சந்திக்கும் ஒவ்வொரு குருவிடமிடமும் இது பற்றி வினவ, பலருக்கும் அது பற்றி விளக்க தெரியவில்லையாம்.
சில காலத்துக்குப் பிறகு, மரத்தடியே தியானத்தில் இருந்த ஒரு முனிவரை கண்டவுடன் அவர் சுய நிலை வரும் வரை காத்திருந்து இது பற்றி கேட்க, 
''அந்த வயதில் இறக்கும் தருவாயில் இருந்த குருவின் வாய்க்குள் என்ன இருந்தது ?'
என முனிவர் கேட்டாராம்.
' நாக்கும் , உள் நாக்கும் இருந்தது ' என்றார்களாம் சிஷ்யர்கள்.
' பல் இருந்ததா ?' கேட்டார் முனிவர்.
' இல்லை ' என பதில் வந்தது.
''அதுதான் வாழ்க்கை . 'வன்மையானது அழியும் . மென்மையானது வாழும் ' என்பதனை உங்களுக்கு புரியவைக்கவே குரு அப்படி தன வாயை காட்டி இருக்கிறார்"
என முனிவர் விளக்கிட, அனைவரும் தங்களின் இது நாள் வரையிலான சந்தேகம் தீர்ந்தபடியால், தீர்த்து வைத்த மரத்தடி முனிவருக்கே சிஷ்யர்கள் ஆனார்களாம்.

No comments:

Post a Comment