Thursday 15 October 2015

சிரிப்போம்... சிறப்போம் !

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றனர்'' முதியோர்.
நடை முறையில் மீண்டும் மீண்டும் சந்தேகமற நிரூபிக்கப் பட்ட கருத்து இது.

நோய் வந்திடில், பணம் பெருமளவுக்கு குறையும், அதன் சிகிச்சைக்கு என்றாலும், மன நிம்மதி நம்மை விட்டகலும் என்பதே சோகத்தின் உச்சம்.

இவற்றை கவனத்தில் கொண்டே, நோயில்லா வாழ்வுக்கான வழிகளை நமது முன்னோர்கள் ஆராய்ந்து வந்தனர். உடல் ரீதியிலான நோய் எதிர்ப்பு காரணங்களோடு, உள ரீதியில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் வழிகளை கண்டறிந்தனர். அவற்றில் ஒன்றுதான், ''வாய்விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்'' எனும் நமது ஹாஸ்ய உணர்வுகளை தட்டி எழுப்பும் சிந்தனையாகும்.

மேலை நாட்டினர் போல் அதிதீவிர எண்ணங்களுடன் ''சென்ஸ் ஒப் ஹியூமர்''  அதாவது ''நகைச்சுவை உணர்வை'' நாம் கொண்டாடுவதில்லை. அப்படி சிரிப்பதென்பதை பைத்தியக் காரத்தனம் எனச் சொல்லும் சுற்றுப்புறத்தில் நாம் வாழ்கிறோம். சிரிக்கத் தெரியாதவர்களுக்கு சிரிப்பை கற்றுத் தர பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனாலும், மருத்துவ உலகம் சொல்லித் தரும் அறிவுரையை  நாம் கவனித்தல் அவசியம்.

சிரிப்பதனால் நோய் குறையுமெனில்,
சிரிப்பினில் ஏன் சுணக்கம்?
சிரிப்பதனால் உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்குமெனில்,
சிரிப்புக்கு ஏன் தடை?
சிரிப்பு மற்றவரை நம்முடன் இணைத்திடுமாயின்,
சிரிப்பை விட சிறந்தது எது?

ஆகவே, சிரிப்போம்... சிறப்போம் !

No comments:

Post a Comment