Wednesday 21 May 2014

நம்மாளு ஒருத்தர்...

முக நூலில் நகைச்சுவை விருந்து படைக்கும் திரு நான் இலியாஸ் அவர்களின் துணுக்குகள் இங்கே....

1.
நம்மாளு ஒருத்தர ஒரு காக்கா ரொம்ப தொல்லபண்ணிக்கிட்டு இருந்துச்சு.........

அவரு எங்க போனாலும் .... அவர துரத்தி துரத்தி கொட்டுனுச்சி........

செம கடுப்புல இருந்த நம்மாளு.. அத எப்படியோ கூண்டு வச்சு புடிச்சிட்டாரு.......

இப்ப அத கொல்லணும்னு முடிவு பண்ணிட்டாரு....... .

கைல ஆயுதம் எதுவும் கிடக்கில..... அதனால ஒரு ஐடியா பண்ணாரு....

அந்த காக்காவ கைல புடிச்சிக்கிட்டு ... பத்து மாடி பில்டிங்குல.... நேரா மொட்டமாடிக்கு போனாரு...

அங்கேருந்து """ போய்.. செத்து தொல ""ன்னு தூக்கி வீசுனாரே பாக்கலாம்..............

2.
நம்மாளு ஒருத்தர் லண்டன் போயிட்டு அப்பத்தான் ஊருக்கு ரிட்டன் ஆயிருந்தார்......

வந்ததும் வராததுமா நேரா ஒய்ஃப் கிட்ட போய் கேட்டாரு..........

"" ஆமா... என்ன பார்த்தா.. ஏதும் ஃபாரினர் மாதிரி தெரியுதா...?/.. ""

அதுக்கு ஒய்ஃப் """ அப்புடி ஒன்னும் தெரியலயே....""" ன்னாங்க......

""அப்புறம் ஏன் லண்டன்ல எல்லோரும் என்ன ஃபாரினர்ன்னு சொல்றாங்க...??..........

3.
நம்மாளு ஒருத்தர் கடை வச்சிருந்தார்....... அதுல கொஞ்சம் லாஸ்.... 

உடனே ஆண்டவன்கிட்டே வேண்டினார்.. 

"' கடவுளே.. நீதான் என்ன காப்பாத்தனும்... எனக்கு லாட்டரி அடிச்சாதான் உண்டு... எனக்கு முதல் பரிசு கிடைக்கணும்...."" ன்னு வேண்டினாறு........... 

அனால் அன்னைக்கு எந்த பரிசும் நம்மாளுக்கு கிடைக்கல.. ...

உடனே நம்மாளு ரெண்டு நாள் கழிச்சு திரும்ப வேண்டினாறு....... அப்பவும் அவருக்கு பரிசு கிடைக்கல...

உடனே கடுப்பான நம்மாளு.... அழுது புரண்டு ஆண்டவன்கிட்டே வேண்டினாறு..... "" இப்ப எனக்கு பரிசு கிடைக்கிலேனா... நான் குடும்பத்தோட தற்கொல பண்ணபோரேன்..."" ன்னு.....

அவரோட அழுகுரள கேட்ட....... ஆண்டவன்..... ஆவேசமா கத்துனான்.... "" டே.. மவனே... முதல போய்.. ஒரு லாட்டரி சீட்டு வாங்குடா........................ன்னு..""


4.
""அப்பா...... 6 + 6 எவ்வளவுப்பா...?/... ""

"" அறிவுகெட்ட முண்டம்... எருமமாடு... அஞ்சாவது படிக்கிறீயே மூதேவி....... இதுகூடவா தெரியல....?/. . போ போயி.. அங்க இருக்கிற கால்குலேட்டர எடுத்துட்டு வா....


இப்போதைக்கு இது போதும்.... சரியா... ?



No comments:

Post a Comment