Monday 31 August 2015

மருத்துவ பரிசோதனை...

ஆண்டுக்கொருமுறை  நாம்  நிச்சயம்  மருத்துவ  பரிசோதனை  செய்து  கொள்ள  வேண்டும்  என்பதை  மருத்துவ  உலகம்  வலியுறுத்துகிறது.

நம் சமூகத்தினர் உடல் நலம் பேணுவதில் அக்கறை இன்றி இருக்கிறார்கள். இந்த பொறுப்பற்ற குணம் மாறவேண்டும். குடும்பத் தலைவர்களும், வாகன ஓட்டுனர்களும் தங்களை சார்ந்திருக்கும் மற்றவர்களையும் நினைத்துப் பார்த்து செயல் பட வேண்டும். அதற்கு, மருத்துவ  பரிசோதனை அவசியமாகிறது.

இறப்பைப் பற்றி பேச 'இன்சுரன்ஸ்காரர்கள்' என்றுமே பயந்ததில்லை. அது அவர்களின் தொழில் சார்ந்த தர்மம். மற்றவர்களுக்கு புரியவைக்க இதுபோன்ற அதிரடி விளக்கம் அவசியமாகிறது. அதன் வகையில், திடீர் மரணங்களுக்கு முக்கிய காரணம், தங்களுக்கு இருக்கும் நோயைப் பற்றிய எவ்வித அறிகுறியும் தெரியாதிருப்பது. ஒரு குடும்பத் தலைவரின் திடீர் மரணம் அந்த குடும்பத்தையே நிலைகுலைய வைக்கிறது. ஒரு வாகன ஓட்டியின் திடீர் மரணம், அவருடன் அல்லது அவர் அருகில் பயணிக்கும் மற்றவர்களையும் ஆபத்துக்கு இட்டுச் செல்கிறது.

இதை, வருடாந்திர மருத்துவ  பரிசோதனையின் மூலம் எதிர்கொள்ளலாம். தனது உடல் நிலை பற்றி தெரிந்துகொண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்த்து விடலாம்.

அதனால் தான் சொல்கிறோம், மருத்துவ பரிசோதனை ஒவ்வொருவருக்கும் அவசியம் என. அதிலும், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மிக மிக அவசியம் என.

No comments:

Post a Comment