Showing posts with label pows best. Show all posts
Showing posts with label pows best. Show all posts

Saturday, 1 December 2012

இருதய நோய் . . .

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நான் இருதய நோயால் பாதிக்கப் பட்டு, "பை பாஸ்" அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். அன்றிலிருந்து பலவகையான அனுபவங்கள் எனக்கு. என்னைத் தெரிந்த பலரும் என்னுடைய பதிவுகளைப் படித்துவிட்டு கேட்கும் கேள்வி, " நான் ஏன் இன்னும் இருதய நோய் பற்றி எழுதவில்லை" என்பது. "உங்களின் அனுபவங்களை மற்றவரின் நலனுக்காக சொல்லலாமே... என்கின்றனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நான் இந்நோய் பற்றி பலருக்கும் சொல்லியபடி தான் இருக்கிறேன். ஏனோ இன்றுதான் எழுதத் தோன்றியது. 

ஆயினும் இருதய நோயின் அறிகுறிகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதனால், அறிகுறிகள் தோன்றிய உடனேயே ஒரு மருத்துவரைச் சந்தித்து இந்நோய் பற்றி எழும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவும்.


நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது :
- சரியான உணவுப் பழக்கம்
- சீரான உடற்பயிற்சி
- சீரான இரத்த அழுத்தம்
- அளவுக்கதிகம் போகாத கொழுப்புச் சத்து
- சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்வது
- இடுப்பளவு : ஆண்களுக்கு 35 அங்குலமும், பெண்களுக்கு 31 அங்குலமும் இருக்கவேண்டும்

நாம் தவிர்க்க வேண்டியது :
- புகை பிடித்தல்
- மது அருந்துதல்
- அதிக அளவில் இறைச்சியை உட்கொள்ளல்
- எண்ணெய் பலகாரங்கள்
- மன அழுத்தம்
- சாப்பிட்டவுடன் உறங்கச் செல்வது

கவனிக்க வேண்டிய அறிகுறிகள் :
- மூச்சுத் திணறல்
- தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி
- நடக்கும்போதும், ஓடும் போதும், உயரமானப் பகுதிகளில் ஏறும்போதும்
தோன்றும்   மார்பு வலி
- தொடர்ந்து சில நிமிடங்களுக்கு மார்பில் படபடப்பு.
- கேஸ்ட்ரிக் எனப்படும் வாய்வுத்தொல்லை போல சில நேரங்களில் தோன்றும்.

இந்தியர்களுக்கு மற்ற இனத்தவரைக் காட்டிலும் பத்து சத விகிதம் அதிகமாகவே இந்த இருத நோய் தாக்குகிறது என்பதை கவனத்தில் நிறுத்துவது நல்லது. 


அறிகுறிகளை முறையான மருத்துவ சிகிச்சையில்   கண்டறிந்து  தீர்க்கப்படாவிடில், அவை கீழுள்ள நிலைகளுக்கு இட்டுச்செல்லும்:
 - இருதயத் தசை அதீத வளர்ச்சி ( LVH )
 - இருதயக் குழாயில் கால்சியம் சேர்தல் ( CORONARY CALCIFICATION  )
 - கழுத்து இரத்தக்குழாயில் அடைப்பு ( CAROTID STENOSIS  )
 - இரத்தக் குழாயில் வீக்கம் மற்றும் செல் செயல் இழந்து போவது.

மேல் சொல்லப்பட்ட நிலை நீடிக்கும் போது அதன் தொடர் விளைவுகள் இப்படி இருக்கும் :
- பக்கவாதம்
- கால் இரத்தக்குழாய் அடைப்பு
- நெஞ்சுவலி ( ANGINA )  -> மாரடைப்பு ( MI )
- திடீர் மரணம் (  SUDDEN DEATH )
- இருதய தசை வளர்ச்சி நிலை ( HEART FAILURE  )


வருமுன் காக்கும் திட்டம் எவ்வளவு நல்லதோ அதே போல ஆபத்து அவசரத்துக்கென ஒரு திட்டம் இருப்பதும் அவசியம் :
-   வீட்டில் உள்ளோர் மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
-   முதல் உதவி செய்ய பழகியிருக்க வேண்டும்
-   யாரை அவசரத்துக்கு அழைப்பது, அவர்களின் தொலைபேசி, கைபேசி எண்கள் யாவை என தெரிந்து வைத்திருக்க வேண்டும்
-   பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை எண்கள் கைவசம் இருத்தல் நலம்
-   நோயாளியின் விவரங்கள், மருந்துகள், அலர்ஜிகள் கொண்ட ஃபைல் அவசரத்தின் போது நோயாளியைக் கவனிக்கும் மருத்துவரின் உடனடி சிகிச்சை முறைகளுக்கு உதவும்
-   மெடிக்கல் இன்ஸுரன்ஸ் விவரங்கள் இருந்தால் நல்லது அல்லது இது போன்ற அவசரத்துக்கென வேண்டிய சேமிப்பு திடீர் நிதிச் சுமையை குறைக்கும்
-   பக்கத்து வீட்டினருடன் நட்பாக இருப்பது இதுபோன்ற சவாலான நேரங்களில் பேருதவியாக இருக்கும்

Friday, 9 November 2012

அங்கும் மழை, இங்கும் மழை. . .

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக வட கிழக்கு பருவ மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு மக்களைத் துண்புறுத்தி வருகிறது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நான் தமிழகத்தின் சென்னையில் பயணம் மேற்கொண்டது நினைவுக்கு வருகிறது. ஆனால் அன்று, அதிக உஷ்ணத்தினாலும் தூசியினாலும் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இப்போது நிலைமை வேறு.

பல இடங்களில் கன மழை காரணமாக குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளில் மழை நீர் தேங்கி, போக்கு வரத்தை ஸ்தம்பிக்கச் செய்வதுடன் பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும் இயங்கவிடாமல் செய்துவிட்டது. இறந்தோர் எண்ணிக்கை ஐம்பதை தொடுகின்றது. நாளிதழ்களில் இதுபோன்ற செய்திகளை படிக்கும் போது மனதுக்கு கஷ்ட்டமாகத்தான் இருக்கிறது. என்னதான் சிறப்பாக வளர்ந்தாலும் நம் பூர்வீகம் அங்குதானே... அதனால் ஏற்படும் மனச்சலனமோ ..? பெரியோர் பலரும் தமிழ் நாட்டு நிலை குறித்து கவலைப் படுகின்றனர்.

இதுமட்டுமின்றி, தானே புயலால் வீடு இழந்து தவிப்போர் எண்ணிக்கையும் அதிகம். இயற்கைச் சீற்றங்ளால் மக்கள் பாதிக்கப் படும் நேரம் அரசாங்க நிவாரணப் பணிகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்து தமிழக அரசு எடுத்திருக்கும் துயர் துடைப்பு சேவையை பாராட்டத்தான் வேண்டும்.

தண்ணீர்  தண்ணீர் என மற்ற மாநிலத்தவரை எதிர்பார்க்கும் நேரம், இப்படி தேவைக்கும் அதிகமாக வெள்ளப் பெருக்கில் மக்கள் அவதிக்குள்ளாவது சரி வர விளங்கிக் கொள்ள முடியாத ஒன்று.

இம்முறை மலேசியாவிலும் பல இடங்களில் இது போன்ற சேதங்களை மக்கள் எதிர் நோக்கி வருகின்றனர். கால்வாய்களில் மழை நீர் நிரம்பி காய்கறி தோட்டங்களில் புகுந்து பல லட்சம் வெள்ளி இழப்புக்களை ஏற்படுத்தியவாறு உள்ளது.


நான் வசிக்கும் பகுதியான இங்கேயும் கடந்த மூன்று வாரங்களாக தினந்தோறும் மழை. அதுவும் அந்தி மழை. அந்தி மழை அழுதாலும் விடாது என்பார்கள். அது மிகச் சரி. மாலையில் செய்யும் எல்லா காரியங்களும் தடைபடுகின்றன.


வடிகால் பாசனத்துறை நம் நாட்டில் அவ்வளவு மோசமாக இல்லாதிருப்பதால் ஆங்காங்கே மட்டுமே வெள்ளத்தினாலான பாதிப்புக்களைப் பார்க்கிறோம். மற்றபடி,  நாற்பது  வருடத்திற்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை.

அந்தக்  காலத்தில்,  நம் சமூகத்தினர் பலரும் பால் மரம் வெட்டும் தொழிலாளிகளாக இருந்தோம். மழை பெய்தால் வேலை இல்லை எனும் நிலையால், வருமாணம் பாதிக்கும். அதனால் மழை என்றாலே அப்படி ஒரு பயம் பலருக்கும்.


கொஞ்சமோ அதிகமோ...  மழை, செடி கொடி மரங்களின் பசுமையை வளர்க்கிறது. வற்றி வரும் ஆறு, குளம், கால்வாய், நதி என நீர் வளங்களை நிறையச் செய்து நமது எதிர் காலத் தேவையை பூர்த்தி செய்கிறது. 

Wednesday, 10 August 2011

டபுள்ஸ் .... பாவ்

கண்ணாடி பிம்பத்தில் எடுக்கப்படுவது மேலே....

1978ல் "குங் பூ பாவ்" எனும் எனது இரட்டைவேட படத்தில் இருந்து தொடங்கியது எனது இந்த டபுள்ஸ் பயணம். 

போரடிக்காத காட்சியமைப்பு தேவை...

தரமான இரட்டைவேட படங்கள் எடுப்பதற்கு மாறுபட்ட காட்சியமைப்புக்கள் தேவை. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது போல இருக்கும் கீழே உள்ளது போல  காட்சிகள் ரசிக்கப்படுகின்றன.


இங்கே படத்தில் 'போபி' கணினியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க பின்னால் அமர்ந்திருக்கும் 'இன்னொரு போபி' அதைப்பற்றி கருத்து சொல்ல  இயற்கையாக வந்திருக்கிறது படம்.



Wednesday, 3 August 2011

சிறுவர்களின் படங்கள் . . .


சிறு பிள்ளைகளையும், குழந்தைகளையும் புகைப்படமெடுப்பதில் அலாதி ஆர்வம் எனக்கு. நாம் கொடுக்கும் உத்தரவுகளை அப்படியே ஏற்று அதன் படி நாம் படமெடுக்க உதவுவார்கள்.















எம்ஜிஆர் பற்றி கண்ணதாசன்.... 1

கவிஞர் வசனங்கள் எழுதிய
 எம்.ஜி.ஆரின் காவியங்கள்!

 கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.

 1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.

 இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.

 1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.

 ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.

 அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!

 1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.

 இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.

 இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.

 இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.

 அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.

 இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.

 இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.

 எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.

 இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.

 தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.

 தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.

 அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.

 காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.

 அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!

 “தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”

 பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.

 முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.

 இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.

 1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.

 நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
 மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!

 கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!

 “நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.

 கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

 அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்.

 வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.

 ‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.

 கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.

 இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.

 நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.

 தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

 நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”

 படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!