Tuesday, 23 April 2013

நல்லதொரு குடும்பம்...

குடும்பப் பெண்கள் பொதுவாக உடை அலங்காரம் செய்து தங்களை அழகு படுத்திக் கொள்ள ரொம்பவும் விரும்புவார்கள். தாங்கள் அழகாகத் தோன்றும் அதே நேரம், மற்றவர்கள் தங்களைப் பார்த்து, தாங்கள் அலங்காரத்தையும், அழகையும்  ஏற்றுக்கொள்ளும் போது மனமகிழ்வது பெண்களின் குணம்.

இதில் எந்தத் தவறும் இல்லை.

ஆயினும் இந்த மனமகிழ்ச்சியில் எவ்வித மாசும் பாடாதிருக்க அலங்காரம் அளவோடு இருக்க வேண்டும், அன்புக் கணவனும் அருகில் இருக்க வேண்டும். கட்டியவன் உடன்  இல்லாத போது இது போன்ற மனமகிழ்ச்சி தரும் செயல்கள் பெண்களை எவ்வித உயர் நிலைக்கும் கொண்டு செல்லாது. பல தருணங்களில் நம் கண்முன்னே நாம் கண்டு வரும் நிதர்சன உண்மை இது.

 நல்ல தம்பதிகள் உருவாகிறார்கள். அன்புடனும் பாசத்துடனும், அனுக்கமாகப் பழகி, தங்களின் உற்சாகத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களே ஒரு நல்ல குடும்பத்தை நிறுவ தகுதியானவர்களாகிறார்கள். இக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளே வீட்டுக்கும் நாட்டுக்கும் நற்பெயரை வாங்கித் தருகிறார்கள்.

இதற்கு அச்சாரமாக அமைவது அன்புக்கு அன்னையும், அறிவுக்குத் தந்தையுமாகும். குழந்தைகள் வளரும் போது அருகில் இருந்து கட்டுக்கோப்பாக அழைத்துச் செல்லும் தந்தையும், அன்னத்தோடு அன்பினையும், நல்ல பண்பினையும் ஊட்டி வளர்க்கும் அன்னையும் எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணம் ஆகும்.

இதற்கு ஈடு அதிக பொருள் குவிக்க உதவும் அயல் நாட்டு வேலைகளல்ல.

"ஆள்வது எப்படி என அரசனுக்கு தெரியாமல் போனாலும், வாழ்வது எப்படி என்று நமக்குத் தெரிய வேண்டாமா ?" என ஒரு முதுமொழி உண்டு.

Monday, 22 April 2013

சொல்லித் தெரியாது....

அறிவிலியான கணவன்,

அவன் கண்களைக் கட்டி மந்திர வித்தைகள் காட்டும் மனைவி,

சுற்றி நின்று கைதட்டி ஆரவாரம் காட்டும் பெற்றோரும் உடன் பிறந்தோரும்..............

ஒரு குடும்பம் பாழ் பட இன்னும் என்ன வேண்டும்..?

இதில் மதத்தில் ஆர்வம், குருக்குல பூஜைகள் என அர்த்தமில்லா பந்தா....

( அடடடா...இதுவே கண்ணக் கட்டுதே, மீதம் உள்ளத எப்படிச் சொல்ல...?)

சொல்ல நினைத்து சொல்ல முடியாத கதை இது....

குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன். . .

இதை நீங்களோ நானோ சொல்லவில்லை. இதைச் சொன்னது சார்லஸ் டார்வின்.

ஒரு உயிரினத்தில் இருந்து புது உயிரினம் உருவாக 'ஒழுங்கு மற்றும் விதிமுறைகள்' என்னென்ன என்பதனை ஆராய்ந்து, பின்னர் 'பரிணாம வளர்ச்சியின் அடிப்படை 'வலுவானவை தொடர்ந்து வாழும்' என்தாகும்' என்றார். 

பல நாடுகளுக்கும் கடல் பயணம் மேற்கொண்டு பல உயிரினங்களின் எலும்புகளை சேகரித்து பல ஆராய்சிகளுக்குப் பின்  அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் " மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன்" என தெளிவுபடுத்தினார்.

அது சரிங்க... நமக்கு இதிலென்ன சந்தேகம்னா...

குரங்கிலிருந்து மனிதன் தோன்றி இருந்தால், குரங்குகள் இன்னும் குரங்குகளாகவே இருக்கக் காரணம் என்ன?

Wednesday, 17 April 2013

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தி மறைவு...

பிபி சிரினிவாஸ் மறைந்த சோகத்தில் இருந்து மீழ்வதற்குள் மற்றொரு சகாப்தாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

விஸ்வ நாதன் ராமமூர்த்தி எனும் இசைமேதைகளில் ஒருவரான டி கே ராமமூர்த்தி காலமானார். இருவருமாக இணைந்து 86 படங்களுக்கு இசைத்திருப்பதும் அதில் பல வெற்றிப்படங்களாக இருப்பதும் சினிமா ரசிகர்களுக்கு தெரியும்.  சி ஆர் சுப்பராமனின் உதவியாளர்களாக சேர்ந்த இருவரும் அவரின் அகால மரணத்திற்குப் பின் அவரின் வெற்றிடத்தை நிரப்ப முன்னனிக்கு வந்தனர்.

ஜி.ராம நாதன், கே வி மகாதேவன், சுப்பையா நாயுடு, டி ஜி லிங்கப்பா மற்றும் டி ஆர் பாப்பா போன்றோர் இசையமைத்துக் கொண்டிருந்த அந்த காலத்தில் இவர்களின் வருகை சிறுகச் சிறுக வரவேற்பினைப் பெற ஆரம்பித்தது.  இவர்கள் இசையமைக்க வந்த காலத்தில் இவர்களோடு கவிஞர் கண்ணதாசனும் கைகோர்க்க இவர்களின் படங்கள் இசையில் புதுப் பொலிவுடன் பலரையும் கவரத் தொடங்கிற்று. 50களில் இருந்து 65 வரை இவர்கள் தமிழ்த் திரையிசை உலகின் உச்சியில் கொடிகட்டி உலா வந்தனர். பேரும் புகழும் இவர்களைத் தேடி வர ஈடு இணையற்ற இசை மாமேதைகளாக வலம் வந்தனர்.

மெல்லிசை மன்னர்கள் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட இவர்கள் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளனர். 1952 இணைந்தனர், 1965ல் பிரிந்தனர். 1965ல் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' படமே இவர்கள் இணைந்து பணியாற்றிய கடைசி படமாகும்.  அதில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகின. சுமார் 29 வருடங்களுக்குப் பின்  "எங்கிருந்தோ வந்தான்" எனும் படத்தில் மீண்டும் இணைந்தனர். ஆயினும் இவர்களின் ஆரம்ப கால பாடல்களே பலராலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.

டி கே ராமமூர்த்தி அவர்கள் ஒரு சிறந்த வயலின் கலைஞராகவும் புகழப்பட்டவர். எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த பணம் படைத்தவன் படத்தில் “கண் போன போக்கிலே கால் போகலாமா' என்ற  பாடலில் வரும் வயலின் சோலோ இவர் வாசித்தது தான்.இதே போல புதிய பறவையில் ஒலித்த எங்கே நிம்மதியிலும் இவரின் வயலின் பங்களிப்பு பெருமளவு பேசப்பட்டது.

டி கே ராமமூர்த்தி அவர்கள்  தனித்து இசையமைத்திருந்த படங்களாக,
தேன்மழை, மறக்க முடியுமா, சாது மிரண்டால், மட்ராஸ் டு பொண்டிச்சேரி, எங்களுக்கும் காலம் வரும், சோப்பு சீப்பு கண்ணாடி, அவளுக்கு ஆயிரம் கண்கள், ஆலயம், பட்டத்து ராணி, நான்,  மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ், தங்க சுரங்கம், காதல் ஜோதி,  சங்கமம்,  சக்தி லீலை, பிரார்த்தனை,  அந்த ஜூன் 16, இவள் ஒரு பௌர்ணமி போன்றவை வெளிவந்தன.

பல இனிமையான பாடல்கள் இப்படங்களில் ஒலிப்பதைக் கேட்கலாம்:

காகித ஓடம் கடல் அலை மீது ,
விழியால் காதல் கடிதம்,
நெஞ்சே நீ போய் சேதியை சொல்லு,
அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே,
ஏ ஃபோர் ஏப்பள், பி ஃபோர் பிஸ்கட், 
கல்யாண சந்தையிலே
என்னடி செல்லகண்ணு
அம்மனோ சாமியோ
தன்னந்தனியாக நான் வந்தபோது
போதுமோ இந்த இடம்

என ஒரு நீண்ட பட்டியல் இவரின் சாதனையினைச் சொல்லுவதாக இருக்கும்.


Tuesday, 16 April 2013

சென்னை நினைவுகள்...

 From Paranggimalai Station to Chennai Beach...


The Egmore Station...

Monday, 15 April 2013

பொன் ஒன்று, காலங்களில் & மனிதன் என்பவன்...

பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
வந்தேன்

பெண் ஒன்று கண்டேன் பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை

என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்

நீ இன்றி நானில்லை
நான் இன்றி நீயில்லையே
சென்றேன் ம்ஹிம்
கண்டேன் ம்ஹிம்
வந்தேன்

பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா

பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

----------------------------------

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
(காலங்களில்..)

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
ஓ..
(பறவைகளில்..)
கனிகளிலே அவள் மாங்கனி
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
(காலங்களில்..)
(காலங்களில்..)

பால் போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
(பால் போல்..)
கண் போல் வளர்ப்பதில் அன்னை
கண் போல் வளர்ப்பதில் அன்னை
அவள் கவிஞனாக்கினாள் என்னை
(காலங்களில்..)


-------------------------

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம்! மனம்! அது கோவிலாகலாம்..

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..
தெய்வமாகலாம்..

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே


நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை


மயக்கமா? கலக்கமா?
மனதிலே குழப்பமா?
வாழ்க்கையில் நடுக்கமா?...

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனையிருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி நிலவும்
(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடு
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)


"சிரிப்பு பாதி அழுகை பாதி...
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி...


பசித்த வயிற்றில் உணவு தெய்வம்
பாலைவனத்தில் தண்ணீர் தெய்வம்
கொட்டும் மழையில் கூரை தெய்வம்
கோடை வெயிலின் நிழலே தெய்வம்
...!"