Thursday, 28 February 2013

உன்னை அறிந்தால் - நீ

 நமக்குப் பயன் தரும் அனைத்தும் புத்தக வடிவில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் ஞானிகளும் அடுத்தடுத்த தலைமுறையினருக்குத் தேவையான வழிகாட்டும் குறிப்புகளை எழுத்து வடிவில் நமக்கு சீதனமாக தந்திருக்கின்றனர்.
இது நமக்காகவும் நம்மைத் தொடர்ந்து வருகின்ற இளைய சமுதாயத்திற்கும் பெரியோர்களால் அருளப்பட்ட பொக்கிஷங்களாகும். இவற்றை சிறுகச் சிறுக படித்து வாழ்வின் நற்பண்புகளை இயன்றவரை நாமே கற்றுத்தீர வேண்டும்.
அடுத்தவர் சொல்லித் தெரிந்து கொள்வதென்பது தப்பான ஒன்றல்ல. ஆயினும் நாம் வாசித்து அதில் பொதிந்திருக்கும் நல்லவற்றை பிறருக்கும் தெளிவு படுத்துவது இன்னும் சிறப்பானதாக கருதப்படும். அதுமட்டுமல்ல, மற்றவர் தவறானவற்றை உண்மை போல் உரைப்பதும், அதை கேட்கும் நாம் அதன் பாவத்தில் விழாமல் நம்மை தற்காத்துக் கொள்வதும் இதனால் சாத்தியமாகிறது.
உதாரணத்திற்கு, "உன்னையே நீ அறி. உலகம் தெளிவுற புலப்படும்" என்றார்கள் சான்றோர். இது, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களுக்கு சுலபமான ஒன்று.  படிக்க அவர்கள் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களை இதற்குத் தகுந்தாற்போல் தன்னை அறிய உதவும் தவ நூல்களின் பக்கம் திருப்பினாலே போதும்.

வாசிப்பை மூச்சாய் கொண்டோர் தெரிந்து தவறிழைக்க மாட்டார். அரிய நூல்கள் அவர்களுக்கு அறிவை போதிக்கும் குருமார்களுக்கு ஈடாகின்றன. தனி நபர்களைப் போல் தப்புகளும் தவறுகளும் ஊடுருவி, அறிவுக்கப்பாற்பட்ட கருத்துக்களை நம்முள் திணிக்கும் செயல் அறவே இருக்காது.

கையில் எடுக்கின்ற தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் அத்துறையினைச் சார்ந்த பல மகான்களினால் இயற்றப்பட்ட புத்தகங்கள் எவ்வித சிரமும் இன்றி இப்போது கிடைக்கின்றன.  இதன் மூலம்,  நமக்குக் கிடைக்கும் வழிகளை நாம் பயன் படுத்தி நம் அறிவின் அடிப்படையை உருவாக்கிக் கொண்டு, அதற்கும் மேல் நாம் தேட வேண்டியது ஏதுமிருப்பின் அவற்றைத் தான் நாம் மற்றவர் மூலம் பெறவேண்டுமே தவிர, எடுத்தவுடனே 'அ தொடங்கி அக்கன்னா வரை' எல்லாவற்றிற்கும் பிறரை தேடிச் செல்வது நம்முடைய கையாலாகத, நாம் தகுதி குறைந்தவர்கள் எனும் குண நலன்களையே  காட்டும்.
தனிமனிதன் தவறு செய்வான், சிந்தனைச் செல்வங்களாகிய அற நூல்கள் தவறு செய்யாது. இதை உணர்ந்து இன்றிலிருந்து தினமும் நல்லனவற்றை வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வோம்.

MGR. . .

Flowers...



Wednesday, 27 February 2013

நம் வீட்டு தேவதை...

பொதுவாக நாம் விஞ்ஞானத்தின் சாயல் உள்ளவற்றை மட்டுமே நம்புகிறோம். உறுதியாக சொல்ல முடியாத, புரியாதவற்றை சிலரின் தனிப்பட்ட நம்பிக்கை என முத்திரை குத்திவிடுகிறோம்.  புராணத்தில் இருக்கும் குறிப்புகளையும், சான்றுகளையும் அலசி ஆராய்ந்து அவற்றில் உள்ள உண்மை நிலைதனை நிரூபிக்கவோ, மறுக்கவோ முனைவதில்லை. அது நமது வேலை இல்லை. வேறொரு குறிப்பிட்ட சிலரின் வேலை என நாம் ஒதுங்கிக் கொள்ள முடிவெடுக்கிறோம். முழு நம்பிக்கை வைத்து செயல் படும் ஒன்றில் தான் பூரணத்துவம் இருக்கின்றது என்பார் சான்றோர். அப்படி ஒன்றை இங்கே பார்ப்போம்.

நாம் குடியிருக்கும் வீட்டை கழுவி துடைத்தெடுத்து சுத்தமாக வைத்துக்கொள்வோம். நமது பெண்மணிகள் கடமை தவறாது இதை பின்பற்றி வருகிறார்கள்.  இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். ஒன்று நமக்கெல்லாம் தெரிந்ததுதான். சுத்தம் சுகம் தரும் என்பது.

ஆனால் பலருக்கும் தெரியாத இன்னொரு காரணமும் உண்டு. 
எங்கள் ஊர் குருக்கள் சொல்லியே எனக்கும் இது தெரிய வந்தது. ஒவ்வொரு வீட்டிலும் 'கிரஹ தேவதை' அந்தந்த வீட்டின் நலன் காக்க இருக்குமாம். அதுக்கு தெரிந்த ஒரே ஒரு வாக்கியம் "அப்படியே ஆகட்டும்...."

அதனால், வீட்டில் எல்லாமும் சுத்தமாகவும், பேசுகின்ற வார்த்தைகள் நல்லதாகவும் இருக்க வேண்டுமாம்.  மங்கலகரமான வார்த்தைகளை நாம் பேசும் போது அந்த தேவதை " அப்படியே ஆகட்டும் " எனுமாம்.  ஆனால், தப்பான வார்த்தைகளை..உதாரணத்திற்கு "இல்லை, முடியாது, மாட்டேன்" எனும் அபசகுன வார்த்தைகளை வீட்டில் யாராவது சொல்லினால் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" எனுமாம்.

அதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதற்கேற்றாற்போல் நல்லவற்றை மட்டுமே பேசப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் வீட்டில் வசிக்கும் தேவதையும் "அப்படியே ஆகட்டும்" என சொல்லி ஆசிர்வதிக்கும் என்கிறார்கள்.

அப்படியானால் "இல்லை, முடிந்துவிட்டது " என்பது போன்ற உண்மைகளை சொல்லக்கூடாதா எனக் கேட்கலாம்.  "நிறைய இருந்தது, மீண்டும் வாங்கி வர வேண்டும்"  என்பதே சரியான பதிலாம். அப்போதுதான் தேவதையும் " அப்படியே ஆகட்டும் " என சொல்லுமாம்.

 நமது பூஜை அறையில் காலையிலும் மாலையிலும் உடலை சுத்தம் செய்து குளித்த பின் தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.   தீபத்தை ஏற்ற ஆறு மணி என்பது காலையிலும் மாலையிலும் சரியான நேரமாகும்.

ஞாயமான  நமது குறைகளை இறைவனிடம் சொல்லலாம்.  தப்பில்லை. இந்த குறைகளை நம் வீட்டில் வசிக்கும் தேவதை வீதியில் ஊர்வலம் வரும் அம்மனிடம் தெரிவித்து அந்த குறைகள் நிவர்த்திக்கப்பட ஆவன செய்யுமாம்.

அதே நேரம், வீட்டிலிருந்து வெளியே எங்காவது போவதற்கு முன்னர் பிராதான வாசலைப் பார்த்து  வணங்கிவிட்டுத்தான் செல்லவேண்டும். அப்போதுதான் 'வீடும் நாம் திரும்பி வரும் வரை பத்திரமாக இருக்கும், நாமும் பத்திரமாக திரும்பி வருவோம்' என சொல்கிறார்கள்.

Tuesday, 26 February 2013

குமுதம் வார இதழ்கள்...பிப்ரவரி 2013




நமக்கு வழங்கப் படுபவைகளை அலட்சியப் படுத்தலாகாது...

ஒருவர் நமக்கு ஆசையோடு விரும்பி வழங்கும் பரிசுகளையோ வாழ்த்துக்களையோ ஒரு காலமும் உதாசீனப் படுத்தக்கூடாது.  அப்படி செய்தால் கொடுத்தவர் வருத்தமடைவார். நம்மேல்  அக்கறையுடனும், நல்ல அபிப்பிராயத்துடனும் இருக்கும் அவர்கள் மனம் வருந்தினால் அது நமக்கு நல்லதல்ல. இராமாயணத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது.

திருமகளை வணங்கி அவர் அணிந்திருந்த மலர்  மாலையை
   பெற்ற,  மூவுலகுக்கும் சென்று இசைபாடும் கன்னி ஒருத்தி அதை துருவாச முனிவரிடம் கொடுத்தாள்.    அதன் மகிமையை நன்கு அறிந்திருந்த துருவாச முனிவர் மனமகிழ்ச்சியில் அதை தன் கழுத்தில் அணிந்துகொண்டு தேவலோகம் வந்தார்.

தேவலோகம் ஒளிக்கதிர்கள் வீச, பிரமாண்ட அழகுடன் காட்சியளித்தது.  பெருஞ்சிறப்போடு பரவசமாக யானை மேல் ஊர்வலமாக வரும் இந்திரனைக் கண்ட துருவாச முனிவர் தான் அணிந்திருந்த,  திருமகளிடம் இருந்து கிடைக்கப் பெற்ற அந்த மலர் மாலையை இந்திரன் மேல் பற்று கொண்டு அவனுக்கு கொடுக்க எடுத்து நீட்டினார்.

அதை பணிவன்புடன் வாங்கிக் கொள்ளாமல், தான் அமர்ந்து வரும் யானையின் அங்குசத்தால் வாங்கி யானை மேல் வைக்க, அது கீழே விழுந்து யானையின் கால்களில் மிதிபட்டது.துருவாச முனிவருக்கு இதைக் கண்டதும் பயங்கரக் கோபம்.  இந்திரன் தன்னை அவமதித்து விட்டான் என அவர் மனம்  வெம்பியது. 

இந்திரனை நோக்கி,
" திமிர் பிடித்தவனே, இந்த மலர் மாலை திருமாலின் மார்பில் குடியிருக்கும் திருமகளினுடையது.  இதை உனக்குக் கொடுக்க எண்ணினேன். உன் செருக்கால், அந்த பாக்கியத்தை நீ இழந்துவிட்டாய்.  ஆகையால் உனது அனைத்து செல்வங்களும், வளங்களும் உன்னை விட்டு கடலில் போய் சேரட்டும்.."
எனச் சாபமிட்டார்.

அத்தருணமே,  தேவ மங்கையர், கற்பக மரம், காமதேனு மற்றும் இந்திரனின் அனைத்துச் செல்வங்களும் அவனை விட்டு மறைந்து போயின.

"சாப மிட்டதும் சங்கமும் பதுமமும் பரியும்
சோப மிக்கவ ரம்பையர் சுரதரு களிரும்
மாப யன் தரு மற்றுள பொருள்களும் வளமும்
கோப மோடலை கடலிடைப் புக்கொழித் தனவே..."


அன்பும், ஆசியும் மற்றும் நமக்கு மன மகிழ்வோடு வழங்கப்படும் எதுவும் முக்கியமானதாக கருதி போற்றப்படவேண்டும்.



Sunday, 24 February 2013

நண்பர்களுக்குள் பகை நீங்கினால்....

ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும் ஹென்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா கயிலையிலே பரமேஸ்வரா
புதிய மேகங்கள் மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும் மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

கிளியின் சிறகு கடன் கேட்கலாம்.. தப்பில்லே
க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்.. தப்பில்லே
நீல வானத்தை துவைக்கலாம்.. தப்பில்லே
நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.. தப்பில்லே
கோட்டை தேவையில்லை ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும் அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா
(ஈஸ்வரா..)

காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்.. தப்பில்லே
காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்.. தப்பில்லே
பிரியமான பெண்ணை ரசிக்கலாம்.. தப்பில்லே
புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்.. தப்பில்லே
மாடர்ன் உலகத்திலே எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும் என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா சண்டை இனி லேதுரா..
(ஈஸ்வரா..)

படம்: கண்ணெதிரே தோன்றினாள்
இசை: தேவா
பாடியவர்: உதித் நாராயணன்