Tuesday, 28 May 2013

டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் - 3

கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
கண்ணு மயங்கி மயங்கி போனா
கண்ணுக்குள் எத்தனை வெள்ளமடி
கண்ணுக்குத் தெரியாதா
கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ
கண்பட்டது கொஞ்சம் புண்பட்டது நெஞ்சம்
கண்வழியே கண்வழியே போனது கிளியே
கரைமேல் பிறக்கவைத்தான்
கதா நாயகன் கதை சொன்னான்
கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு
கட்டான கட்டழகு கண்ணா
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
கட்டோடு குழல் ஆட ஆட
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காகிதத்தில் கப்பல் செய்து
காகித ஓடம் கடலலை மீது
காலை நேரம் ஒருவன் வந்தான்
காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வாங்க போனேன்
காசேதான் கடவுளப்பா
காதல் மலர்க் கூட்டம் ஒன்று
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
காதல் உள்ளம் கவர்ந்த நீயே கள்வன்தானோ காதலன் தானோ
காவலும் இல்லாமல் வேலியும் இல்லாமல்
காவேரிக் கரை இருக்கு
காவேரிதான் சிங்காரி சிங்காரிதான் காவேரி
கேளம்மா சின்னபொண்ணு கேளு
கேள்வி பிறந்தது அன்று
கேட்டால் ஒன்று தரவேண்டும்
கேட்டவரெல்லாம் பாடலாம்
கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
கொடியில் இரண்டு மலருண்டு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
கொக்கரக்கோ கொக்கரக்கோ சேவலே
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கோவிலிலே வீடு கட்டி கோபுரத்தில் கூடு கட்டி
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குங்குமச் சிமிழே
குங்குமப் பொட்டின் மங்களம்
குங்குமப் பொட்டுக்காரா கோண கிறாப்புக் காரா
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா
கூந்தல் கறுப்பு
லவ் லவ் எத்தனை அழகு எங்கள் கண்களிலே
மட்ராஸ் நல்ல மட்ராஸ்
மலை சாய்ந்து போனால் மரமாகலாம்
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
மலரும் கொடியும் பெண்ணென்பார்
மலரும் வான் நிலவும் கொஞ்சும் எழிலெல்லாம் உன்
மனம் ஒரு குரங்கு
மனத்தோட்டம் போடுமென்று மாயவனார் கொடுத்த உடல்
மங்கியதோர் நிலவினிலே
மனிதனை மனிதன் சாப்பிடுராண்டா
மஞ்சள் முகமே வருக
மன்னிக்க வேண்டுகிறேன்
மண்ணுக்கு மேலாடை
மயக்கம் எனது தாயகம்
மயங்கிவிட்டேன் உன்னைக் கண்டு
மாடிவீட்டுப் பொண்ணு மீனா

Monday, 27 May 2013

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் - 2

என்னம்மா சௌகியமா எப்படி இருக்குது மனசு
எண்ணப் பறவை சிறகடித்து
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
என்றும் பதினாறு வயது பதினாறு
என்றும் துண்பமில்லை இனி சோகமில்லை
எந்தன் மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
எதையும் தாங்குவேன் அன்புக்காக
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
எத்தனை பெரிய மனிதனுக்கு
எல்லோரும் கொண்டாடுவோம்
ஏமாறச் சொன்னது நானோ
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
ஏட்டில் எழுதி வைத்தேன் எழுதியதை சொல்லி வைத்தேன்
ஹெல்லோ ஹெல்லோ சுகமா
இடி இடிச்சி மழை பொழிந்து எல்லாம் நின்னாச்சி
இகலோகமே இனிதாகுமே
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
இன்பம் இன்பம் என்னவென்றொருவன் இறைவனை கேட்டானாம்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
இனியது இனியது உலகம்
இனியவளே எனக்குறியவளே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா
இந்த புன்னகை என்ன விலை
இப்படியே இருந்து விட்டால் எப்படி இருக்கும் எதிர் காலம்
இறைவன் எனக்கொரு உலகத்தைப் படைச்சி
இறைவன் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான்
இதய ஊஞ்சல் ஆடவா
இது மாலை நேரத்து மயக்கம்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா
இது வேறுலகம் தனி உலகம்
இதுவும் வேண்டுமடா எனக்கு இன்னமும் வேண்டுமடா
இவளொரு அழகிய பூஞ்சிட்டு வயது ஈரொம்போது பதினெட்டு
இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்
ஈனா மீனா டிக்கா ஜெய் ஜாமனிக்கா
ஜாலமெல்லாம் தெரியுது ஆஹா
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
கடவுள் செய்த பாவம் இங்கு காணும் துண்பம் யாவும்
கை இருக்குது கால் இருக்குது முத்தையா
கை விரலில் பிறந்தது நாதம்
கல கலக்குது காத்து சல சலக்குது கீத்து
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கல்வியா செல்வமா வீரமா
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
கல்யாண சாப்பாடு போடவா
கண் கவரும் சிலையே காட்சி தரும் கலையே
கண் படைத்தான் உன்னை காண்பதற்கு
கண் போன போக்கிலே கால் போகலாமா
கணக்கெழுத தெரிந்த பெரியவனே
கனவில் நின்ற திருமுகம் கன்னி இவள் மலர் முகம்
கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உள்ளாசம் காண்போமே
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
கண்ணானால் நான் இமையாவேன்
கன்னத்தில் என்னடி காயம்
கண்ணே தேடி வந்தது யோகம்
கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தை காட்டினாள்

டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் - 1

அச்சம் என்பது மடமையடா
அடி என்னடி ராக்கம்மா
அடிக்கட்டுமா முரசு அடிக்கட்டுமா
அடியே நேத்து பிறந்தவள் நீயே
அக்கம் பக்கம் பார்க்காதே
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அல்லித்தண்டு காலெடுத்து அடிமேல் அடியெடுத்து
அமைதியான நதியினிலே ஓடம்
அம்மா வேண்டுமா உனக்கோர் அம்மா வேண்டுமா
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு
அம்மாடி தூக்கமா ஆமாமா கேட்கனுமா
அன்பே உன் பெயர் அன்னை
அன்பே வா உள்ளம் என்றொரு கோயிலிலே
அன்பு வாழ்க ஆசை வாழ்க
அன்பு நடமாடும் கலை கூடமே
அன்புள்ள மான் விழியே ஆசையில் ஓர் கடிதம்
அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகதித்திலே
அன்று வந்ததும் இதே நிலா
அனுபவி ஜோரா அனுபவி
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
அவள் ஜாதிப் பூவென சிரித்தாள்
அவளா சொன்னாள் இருக்காது
அவனுக்கென்ன தூங்கி விட்டான்
அவுளுக்கென்ன அழகிய முகம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அழகை பாடவந்தேன்
ஆடையை பாரு ஜாடையை பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல
ஆஹா நம் ஆசை நிறைவேறுமா
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
ஆண்டவன் முகத்தை பார்க்கனும்
ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான்
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு
ஆற்றும் கடமையை மறக்காதே
ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
ஆசை கனவே நீ வா
ஆசைப் பட்டது நானல்ல மனது என் மனது
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
டிங்கிரி டிங்காலே
எளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்
எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச்சொல்லி
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
என் கேள்விக்கென்ன பதில்
எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்
எனது ராஜ சபையிலே ஒரே கொண்டாட்டம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
எங்கே போய்விடும் காலம் அது உன்னையும் வாழ வைக்கும்
எங்கெல்லாம் வலையோசை கேட்கின்றதோ
எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்
என்ன கோபம் சொல்லு பாமா
என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்
என்ன உறவோ என்ன பிரிவோ காதல் நாடக மேடையில்
என்னை காதலித்தால் மட்டும் போதுமா
என்னை முதல் முதலாக பார்த்தபோது
என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
என்னைத் தெரியுமா நான் சிரித்துப் பேசி

டி எம் எஸ் அவர்களின் பக்திப் பாடல்கள்

ஐயா டி எம் சௌந்தரரஜன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு...
தனது கம்பீரக் குரலால், வசீகரக் குரலால் தமிழை உலகமெங்கும்
தனது இசையின் மூலம் பரப்பிய ஒப்பற்ற ஒரு தெய்வப் பிறவி. 

அன்னார் உடல் வீழ்ந்தாலும் அவரின் அறுபது ஆண்டுகளின் தொண்டு நம்மை விட்டு அகலாது என்றும்.

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
- கற்பனை என்றாலும்

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்



முருகா... முருகா...

அழகென்ற சொல்லுக்கு முருகா - உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற)

சுடராக வந்த வேல் முருகா - கொடுஞ்
சூரரைப் போரிலே வென்ற வேல் முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா - முக்
கனியான தமிழ் தந்த செல்வமே முருகா (அழகென்ற)

ஆண்டியாய் நின்ற வேல் முருகா - உன்னை
அண்டினோர் வாழ்விலே இன்பமே முருகா
பழம் நீ அப்பனே முருகா - ஞானப்
பழம் உன்னை அல்லாது பழம் ஏது முருகா (அழகென்ற)

குன்றாறும் குடி கொண்ட முருகா - பக்தர்
குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா
சக்தி உமை பாலனே முருகா - மனித
சக்திக்கே எட்டாத தத்துவமே முருகா (அழகென்ற)

பிரணவப் பொருள் கண்ட திரு முருகா - பரம்
பொருளுக்கு குருவான தேசிகா முருகா
ஹரஹரா ஷண்முகா முருகா - என்று
பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா (அழகென்ற)

அன்பிற்கு எல்லையோ முருகா - உந்தன்
அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா - எந்தன்
கலியுக வரதனே அருள் தாரும் முருகா (அழகென்ற)

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா
முருகா....
(உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

பாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா
(உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா
(உள்ளம் உருகுதய்யா)

கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்
(கந்தன்)


சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்
(கந்தன்)


மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)


சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே

உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ
கழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா


இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட
அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்


சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா

சுடர்மிகு வடிவேலா !
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா - தீஞ்சுவை ஆகவில்லையே!


எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல
இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா - இன்பம் ஏதும் இல்லையே!


அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும்
அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா - அங்கம் மணக்கவில்லையே!


சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல
சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா - சீர் மணம் வேறு இல்லையே!


முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும்
முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா - முதற் பொருள் ஆகவில்லையே!


சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல
மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா - மெய்ப் பொருள் வேறு இல்லையே!


எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே -
முருகய்யா - எண்ணத்தில் ஆடவில்லையே!

மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா - மற்றொரு தெய்வமில்லையே!
(தித்திக்கும் தேன் பாகும்)


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்

மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க

வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே ஏ..ஏ... ஏ...
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்

அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா


ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்

சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா

சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகனக் குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா மனம் உருகாதா முருகா


சிந்தனை செய் மனமே
சிந்தனை செய் மனமே தினமே
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை ஞான தேசிகனை ஆ...ஆ..
செந்தமிழ்க்கருள் ஞான தேசிகனை - செந்தில்
கந்தனை வானவர் காவலனை குகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை
ஆதலினால் இன்றே அருமறை பரவிய சரவணபவகுகனை
சிந்தனை செய் மனமே - செய்தால்
தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை
சிந்தனை செய் மனமே - மனமே ஏ...


முருகா நீ வரவேண்டும்!
முருகா நான் நினைத்த போது நீ வரவேண்டும்!
முருகா நீ வரவேண்டும்!

நினைத்த போது நீ வரவேண்டும்!

நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே!

நினைத்த போது நீ வரவேண்டும்!

கலியுக தெய்வம் கந்தா நீயே!
கருணையின் விளக்கமும் கடம்பா நீயே!
மலையெனத் துயர்கள் வளர்ந்திடும் போதில்
மாயோன் மருகா முருகா என்றே

நினைத்த போது நீ வரவேண்டும்!

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா

தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா

பலவித நாடும் கலை ஏடும்
பணிவுடன் உனையே துதி பாடும்
கலை அலங்கார பாண்டிய ராணி நேசா
மலையின் வாசா
மங்கா மதியானவா
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா


சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் ஐயா சௌந்தரராஜன் அவர்கள் முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்டிருந்த ஒலி நாடாக்கள் மிகப் புகழ் பெற்றவை. பட்டி தொட்டி என்றில்லாது எல்லா நகரங்களிலும் கூட இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முருக பக்தர்களை முருகனிடம் இணையச் செய்யும் அப்படியொரு சக்தி அப்பாடல்களுக்கு. அவர் மறைந்தாலும் அவர் முருகனுக்காற்றிய சேவை மறையாது.

Saturday, 25 May 2013

டி எம் சௌந்தரராஜன் காலமானார்...



சுமார் 60 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த பிரபல மற்றும் பிரமாண்டமான பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் தனது 91வயதில் இறைவனடி சேர்ந்தார்.

எம்.எஸ்.சுப்பையா நாயிடுவால் அன்றைய சுப்பர்ஸ்டார் தியாகராஜ பாகவதருக்கு முதன் முதலில் குரல் கொடுத்தார். பிறகு எம்ஜிஆரின் " எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" எனும் மலைகள்ளன் பாடலின் மூலம் புகழ் பெறத் தொடங்கினார். தொடர்ந்து அவர் எம்ஜிஆருக்கென குரல் கொடுக்கும் முக்கிய பாடகராக அறிமுகமானார். கிடைத்த பல வாய்ப்புக்களை அவர் தன் குரல் வலிமையால் நிரூபித்து தனக்கு நிகர் யாருமில்லை எனச் சொல்லும் அளவுக்கு பேரும் புகழும் பெற்றார்.

யாருக்காகப் பாடுகிறாரோ அவர்களைப் போல குரலை மாற்றிப் பாடுவது இவரின் பாணி. ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளின் தமிழ்த்திரை உலகின் முக்கிய நடிகர்களாகிய எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்றோருக்கு இவரின் குரல் அப்படியே பொருந்தியது.
 எனவே அவர்களின் பல படங்களுக்கு குரல் கொடுத்ததன் வழி அவர்களோடு இவரும், இவரோடு அவர்களும் புகழ்பெற்றனர்.

சுமார் பத்தாயிரம் பாடல்கள் பாடி இருக்கும் இவர், முருகன் பக்திப் பாடல்கள் என வெளியிட்ட ஒலி நாடா மற்றும் சீடிக்கள் மிகவும் பிரபலமானவை.



Friday, 24 May 2013

வைகாசி விசாகம்...



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இது. விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

 நம்மூர் ஆலயங்களில் தற்போது  வெகு விமரிசையாக இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

சின்ன சின்ன நடை நடந்து...

'சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா என்று நீ அழைத்தால்
அமுத கானம்
பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா...'

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் தாதியர் தினம் போன்ற  சிறப்பு தினங்களை ஏன் கொண்டாடுகிறோம்....?

அவர்களின் சேவைகளுக்கு மதிப்புக் கொடுத்து, அந்த தியாகத்தை போற்றி, அவரகளின் தொண்டுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலே தான் நாம் அது போன்ற சிறப்பு நாட்களை நினைவுகூர்கிறோம். அவை அந்த ஒரு நாட்களுக்கு மட்டுமல்ல, தொடர்ந்து வரும் எல்லா நாட்களிலும் அவர்களின் அர்ப்பணிப்பு பூஜிக்கப் படவேண்டும்.

இந்த தூய எண்ணம் நம் மனதில் என்றென்றும் இருப்பது அவசியம்.

சின்ன சின்ன நடை நடந்து

செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா

ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்
ஆடி வரும் தென்றல் என்பார்
பாடி வரும் அருவி என்பார்

தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா
தேடி வரும் செல்வம் உன் போல்
தெய்வம் வேறு இல்லையடா

கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
கொஞ்சும் அழகை கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ

மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா
மேவும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா

சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
சின்ன சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து

அம்மாவென்று நீ அழைத்தால்
அமுத கானம் பொழியுமடா
அமுத கானம் பொழியுமடா!!


'காவேரியின் கணவன்' படத்தில்  பி.சுசீலாவின் குரலில் இந்த பாடல் தாயுள்ளத்துக்கு ஒரு உதாரணம். பழைய பாடல் விரும்பிகளுக்கு இன்றும் இனிமை சேர்க்கும் அற்புதமான ஒன்று இது.