Showing posts with label chola restaurant. Show all posts
Showing posts with label chola restaurant. Show all posts

Thursday, 11 August 2011

மேலும் டபுள்ஸ் படங்கள்...

இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வேடங்களில் படமெடுப்பது இன்று நேற்றல்ல, அவை பாகவதர் காலத்திலேயே இருந்திருக்கிறது.  இரட்டை வேடங்களில் எம் ஜி ஆரைப் பார்த்து அசந்து போன என்னிடம் என் தந்தை ஒரு நாள் அவர் பார்த்த பாகவதர் காலத்து காட்சி ஒன்றினைச் சொன்னார்.

அவர் சொன்னது திருவிளையாடல் திரையில் சிவாஜி அவர்களின் ஐந்து வேட நடிப்பில் வந்த பாடலை நினைவுக்கு கொண்டுவந்தது. அதே போன்று ஐந்து வேடங்களில் பாகவதர் நடித்திருப்பாதாகச் சொன்னார். சிவாஜி நடிப்பில் வந்த படத்தை வண்ணத்தில் அதே போன்ற காட்சிகளில் சில வருடங்களுக்குப் பின்னர் நவீன மயமாக்கி இருந்தனர் என்றார்.

ஒளிவிளக்கு திரையில் எம் ஜி ஆரின் " தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?" எனும் பாடலில் ஐந்து பேரைப் பார்த்தோம்.

இப்படி காலம் மாற மாற பலவிதங்களில் பல எண்ணிக்கையில் ஒரே காட்சியில் நடிகர்கள் தோன்றத்தொடங்கி விட்டனர்.  

தில்லாலங்கடியில் ஜெயம் ரவி 15 வித வேடங்களில் அழகாய்  தோன்றி நடித்தார். காவலனில் விஜயின் 'யாரது' பாடலிலும் காட்சிகள் அருமையாக அமைக்கப்பட்டிருந்தன.